கொரோனா ஊரடங்கு: கிணத்துக்கடவு அருகே தாமரைகுளத்தில் கயிறு திரிக்கும் தொழில் பாதிப்பு!

கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே தாமரைகுளத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கயிறு திரிக்கும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே தாமரைகுளத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கயிறு திரிக்கும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைக்குளம் பகுதியில் பாரம்பரியமாக நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தென்னை நார் மூலம் கயிறு திரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாரக் கூலி அடிப்படையில் தொழில் செய்து வரும் கயிறு திரிக்கும் தொழிலாளர்கள் முழு ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக கயிறு திரிக்கும் தொழில் முடங்கி உள்ளது.

இந்த நிலையில், ஊரடங்கு காரணமாக கட்டுமான பணிகள் மற்றும் கட்டிட பொருட்கள் விற்பனை நிலையங்கள் மூடியிருப்பதால் கயிறு விற்பனை முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.



இதனால் கடந்த இரண்டு மாதங்களாக கயிறு திரிக்கும் பணியை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் இத்தொழிலை நம்பி உள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.

மேலும், இத்தொழிலுக்கு வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் வாங்கிய கடன்களை திருப்பி செலுத்த வற்புறுத்தி வருவதாகவும், இதனால் வங்கியில் வாங்கிய கடனை அரசு தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கயிறு திரிக்கும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

அதேபோல, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் கயிறு திரிக்கும் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...