கோவையில் அதிக பணம் வசூலிக்கும் மருத்துவமனைகளின் உரிமத்தைத் தடை செய்வது மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தைத் திருப்பி வாங்கித் தர வேண்டும் - பாமக அசோக் ஶ்ரீநிதி

கோவை: கோவையில் அதிக பணம் வசூலிக்கும் மருத்துவமனைகளின் உரிமத்தைத் தடை செய்வது மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தைத் திருப்பி வாங்கித் தர வேண்டும் என்று பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: கோவையில் அதிக பணம் வசூலிக்கும் மருத்துவமனைகளின் உரிமத்தைத் தடை செய்வது மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தைத் திருப்பி வாங்கித் தர வேண்டும் என்று பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையில் கொரோனா பெருந்தொற்று பாதிக்கப்பட்ட மக்களிடம் அதிகக் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளுக்கு எதிராக பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பாமகவைச் சேர்ந்த அசோக் ஸ்ரீநிதி, ‘‘கொரோனா சிகிச்சைக்கு அதிகக் கட்டணம் வசூலித்த மருத்துவமனைகளிடம் இருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தை திருப்பி வாங்கித் தர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

தனியார் மருத்துவமனைகளிடம் சிகிச்சைக்காக அதிகப் பணத்தை இழந்ததோடு, உயிரிழப்பையும் சந்தித்த பல்வேறு பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து புகார்களைப் பெற்று ஒருங்கிணைத்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் கிராம சுகாதார சேவை) ஆகியோரை இரண்டு முறை பார்த்து, பாமக தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. இதன் காரணமாக நான்கு பேர் கொண்ட குழுவை மாவட்ட ஆட்சியர் நேற்று அமைத்துள்ளார்.

எங்கள் நோக்கம் அதிக பணம் வசூலிக்கும் மருத்துவமனைகளின் உரிமத்தை தடை செய்வது மட்டுமல்ல. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தை திருப்பி வாங்கித் தர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். எனவே, இதற்கான நல்ல தீர்வு கிட்டும்வரை போராட்டம் தொடரும்'' என்றார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...