பொள்ளாச்சி அடுத்த கோமங்களம் பகுதியில் குட்டையில் மண் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது - ஜேசிபி, டிராக்டர் பறிமுதல்!

கோவை: பொள்ளாச்சி அடுத்த கோமங்களம் பகுதியில் குட்டையில் மண் திருட்டில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த போலீசார் JCB உள்ளிட்ட வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.


கோவை: பொள்ளாச்சி அடுத்த கோமங்களம் பகுதியில் குட்டையில் மண் திருட்டில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த போலீசார் JCB உள்ளிட்ட வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.

பொள்ளாச்சி மண்டல துணை தாசில்தார் சரவணன் தலைமையில் வருவாய்த்துறை, காவல்துறையினர் உள்ளிட்ட கொரோனா தடுப்பு குழுவினர் பொள்ளாச்சி அருகே கோமங்கலம் - சங்கம்பாளையம் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அரசுக்கு சொந்தமான புறம்போக்கு பகுதியில் அமைந்துள்ள முள்ளிமடை குட்டையில் ஜேசிபி மற்றும் டிராக்டர் வாகனங்கள் மூலம் ஒரு கும்பல் கிராவல் மண் அள்ளிக் கொண்டிருந்தனர்.

இதை பார்த்த அதிகாரிகள் அவர்களிடம் விசாரித்தபோது உரிய அனுமதி இல்லாமல் மண் அள்ளியது தெரியவந்தது. இதனையடுத்து, கோமங்கலம் காவல் நிலையத்தில் அதிகாரிகள் கொடுத்த புகாரையடுத்து மண் திருட்டில் ஈடுபட்ட சீலக்காம்பட்டியை சேர்ந்த அருண்குமார், கனகராஜ், பாஸ்கரன், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், மண் அள்ளுவதற்கு பயன்படுத்திய ஜே சி பி இயந்திரம் மற்றும் 2 டிராக்டர்களை பறிமுதல் செய்தனர். மேலும், சட்டவிரோதமாக மண் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவிநாசி கிளை சிறையில் அடைத்தனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...