கிணத்துக்கடவு சிங்கையன்புதூர் கிராமத்தினருக்கு மளிகை பொருட்கள் வழங்கி பாஜக நிர்வாகி உதவி..!

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சிங்கையன்புதூர் கிராம மக்களுக்கு அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் வழங்கி பாஜக நிர்வாகி உதவிக்கரம் நீட்டினார்.


கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சிங்கையன்புதூர் கிராம மக்களுக்கு அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் வழங்கி பாஜக நிர்வாகி உதவிக்கரம் நீட்டினார்.

கொரோனா தொற்று இரண்டாம் அலை பாதிப்பு அதிகரித்து வந்ததால், தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. முழு ஊரடங்கு காரணமாக தொழிற்சாலைகள் மூடபட்டுள்ளதால் மக்கள் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருவதால் வருமானம் இன்றி இருந்து வருகின்றனர்.

இந்தநிலையில், கிணத்துக்கடவு அருகேயுள்ள சிங்கையன்புதூர் கிராமத்தில் வசிக்கும் கூலித்தொழிலாளர் உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் முழு ஊரடங்கால் வேலையின்றி அவதிபட்டு வருகின்றனர்.



வருமானம் இன்றி அவதிப்படும் கிராம மக்களுக்கு உதவி செய்யும் வகையில், அப்பகுதியைச் சேர்ந்த கோவை தெற்கு மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினர் சிவன்மலை கோபால் உள்ளிட்ட இளைஞர்கள் தங்களது கிராமத்தில் உள்ள 700-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி, பருப்பு, முட்டை உள்ளிட்ட மளிகைச் சாமான்கள் உள்ள தொகுப்பினை வழங்கி இன்று உதவிக்கரம் நீட்டினர்.

சிங்கையன்புதூர் இளைஞர்களின் இந்த செயல் கிராம மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது. இதில், இந்து முன்னணி நிர்வாகி ஈஸ்வரன், சுரேஷ்குமார், பார்த்தசாரதி, கணேசன், கருப்பசாமி உள்ளிட்ட பலர் மளிகைப் பொருட்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...