கோவை பெண் போலீஸ் பாத்ரூமில் தூக்குப்போட்டு தற்கொலை... கோவை போலீஸார் விசாரணை..!

கோவை: கோவையில் பெண் போலீஸ் ஒருவர் காதல் விவகாரத்தில், போலீஸ் குடியிருப்பு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


கோவை: கோவையில் பெண் போலீஸ் ஒருவர் காதல் விவகாரத்தில், போலீஸ் குடியிருப்பு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மதுரை பேரையூர் தாலுகா கெஞ்சம்பட்டி, பட்டி காளியம்மன் கோயில் தெரு பகுதியில் வசிப்பவர் ராமழகு. இவருடைய மகள் மகாலட்சுமி வயது 25, கோவையில் உள்ள நாலாவது பெட்டாலியனில் ஆயுதப் படை காவலராக பணிபுரிந்து வந்தார். இவர் கோவை அவிநாசி சாலை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் தங்கி வேலை பார்த்து வந்தார். திருமணமாகாதவர். இவர் கோவையில் தன்னுடன் பணிபுரியக்கூடிய அருண்குமார் என்கின்ற காவலரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில், காதல் விவகாரம் அவருடைய வீட்டிற்கு தெரிய வரவே வீட்டில் இவருக்கு மாப்பிள்ளை பார்க்க தொடங்கியுள்ளனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மகாலட்சுமி மன உளைச்சலுடன் காணப்பட்டுள்ளார். நேற்று மாலை பணி முடிந்தவுடன் உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள தன்னுடைய போலீஸ் குடியிருப்புக்கு சென்றார். பிறகு இரவு அவருடைய காதலன் அருண்குமார் மகாலட்சுமிக்கு போன் செய்துள்ளார். தொடர்ந்து போனை எடுக்காமல் இருந்ததால் அருண்குமார் அதிர்ச்சி அடைந்து நேரடியாக வீட்டிற்குச் சென்று பார்த்தபோது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. வீட்டுக் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது அவர் தங்கியிருந்த வீட்டின் பாத்ரூம் ஜன்னல் கம்பியில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.

இதுகுறித்து அருண்குமார் ரேஸ்கோர்ஸ் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். இந்தநிலையில், ஆயுதப்படை பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமாரவேல் கொடுத்த புகாரின் அடிப்படையில் ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து உடலைக் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். பெண் போலீஸ் தூக்குப்போட்டு இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...