கோவை: கோவை வால்பாறை தேயிலைத் தோட்டத்தின் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள வீடுகளை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்ததில் வீடுகள் சேதமடைந்தன.
கோவை: கோவை வால்பாறை தேயிலைத் தோட்டத்தின் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள வீடுகளை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்ததில் வீடுகள் சேதமடைந்தன.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது பன்னிமேடு தேயிலைத் தோட்டம் இங்கு சுமார் 600-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கான குடியிருப்புகள் தேயிலைத் தோட்டப் பகுதியிலேயே வரிசை வீடுகளாக வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தேயிலைத் தோட்டத்தின் இரண்டாம் பிரிவில் பணியாற்றி வருபவர்கள் ராஜாம்பாள், கண்ணம்மாள் இவர்களுடைய குடியிருப்புகளை இன்று அதிகாலையில் 7 காட்டு யானைகள் முற்றுகையிட்டன.

வீட்டின் முன்புறம் உள்ள ஜன்னல் கதவுகளை உடைத்து உள்ளே இருந்த பொருட்களை எடுத்து வெளியே தூக்கி வீசி சேதப்படுத்தின. காட்டு யானைகள் வந்ததை அறிந்த ராஜாம்பாள், கண்ணம்மாள் இருவரும் பின்பக்கம் வழியாக ஓடி உயிர் பிழைத்தனர்.
தகவலறிந்து வந்த தேயிலைத் தோட்டக் காவலர்கள் காட்டு யானைகளை விரட்டி, அவர்களுக்கு பாதுகாப்பு அளித்தனர். தொடர்ந்து காட்டு யானைகள் அருகில் உள்ள வனப்பகுதியில் நிற்பதால், மீண்டும் இரவு வரலாம் என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். தகவலறிந்த வனத்துறையினர் ரோந்து பணியை மேற்கொண்டுள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது பன்னிமேடு தேயிலைத் தோட்டம் இங்கு சுமார் 600-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கான குடியிருப்புகள் தேயிலைத் தோட்டப் பகுதியிலேயே வரிசை வீடுகளாக வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தேயிலைத் தோட்டத்தின் இரண்டாம் பிரிவில் பணியாற்றி வருபவர்கள் ராஜாம்பாள், கண்ணம்மாள் இவர்களுடைய குடியிருப்புகளை இன்று அதிகாலையில் 7 காட்டு யானைகள் முற்றுகையிட்டன.
வீட்டின் முன்புறம் உள்ள ஜன்னல் கதவுகளை உடைத்து உள்ளே இருந்த பொருட்களை எடுத்து வெளியே தூக்கி வீசி சேதப்படுத்தின. காட்டு யானைகள் வந்ததை அறிந்த ராஜாம்பாள், கண்ணம்மாள் இருவரும் பின்பக்கம் வழியாக ஓடி உயிர் பிழைத்தனர்.
தகவலறிந்து வந்த தேயிலைத் தோட்டக் காவலர்கள் காட்டு யானைகளை விரட்டி, அவர்களுக்கு பாதுகாப்பு அளித்தனர். தொடர்ந்து காட்டு யானைகள் அருகில் உள்ள வனப்பகுதியில் நிற்பதால், மீண்டும் இரவு வரலாம் என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். தகவலறிந்த வனத்துறையினர் ரோந்து பணியை மேற்கொண்டுள்ளனர்.