கோவை: கோவை நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி 2 வாரங்களுக்கு பிறகு தொடங்கியது.
கோவை: கோவை நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி 2 வாரங்களுக்கு பிறகு தொடங்கியது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள நல்லட்டிபாளையம், வடசித்தூர், சொக்கனூர் ஆகிய பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வந்தது.
கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டதால் நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மட்டும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வந்தது.
இதனிடையே, கடந்த இரண்டு வாரங்களாக தடுப்பூசி இருப்பு இல்லாததால் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று மாலை நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 400 டோஸ் கொரோனா தடுப்பூசி கொண்டுவரப்பட்டது
இதனைத் தொடர்ந்து, இன்று காலை முதல் நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடும் பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்றது.

தடுப்பூசி போடுவதை அறிந்த பொதுமக்கள், நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு படையெடுத்ததால் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வரிசையாக தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.

ஒரே நேரத்தில் நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்கள் கூடியதால் பரபரப்பாக காணப்பட்டது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள நல்லட்டிபாளையம், வடசித்தூர், சொக்கனூர் ஆகிய பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வந்தது.
கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டதால் நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மட்டும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வந்தது.
இதனிடையே, கடந்த இரண்டு வாரங்களாக தடுப்பூசி இருப்பு இல்லாததால் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று மாலை நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 400 டோஸ் கொரோனா தடுப்பூசி கொண்டுவரப்பட்டது
இதனைத் தொடர்ந்து, இன்று காலை முதல் நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடும் பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்றது.
தடுப்பூசி போடுவதை அறிந்த பொதுமக்கள், நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு படையெடுத்ததால் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வரிசையாக தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.
ஒரே நேரத்தில் நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்கள் கூடியதால் பரபரப்பாக காணப்பட்டது.