உதிரம் கொடுத்து உயிர் காப்போம்..! கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தொடர் இரத்ததானம்!

கோவை: கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஊரே வீட்டில் முடங்கி கிடக்கும் நிலையில், கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோவை அரசு மருத்துவமனையில் தொடர் ரத்ததானம் செய்து வருகின்றனர்.


கோவை: கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஊரே வீட்டில் முடங்கி கிடக்கும் நிலையில், கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோவை அரசு மருத்துவமனையில் தொடர் இரத்ததானம் செய்து வருகின்றனர்.

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை கோவை மாவட்டத்தில் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக் கையில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக மனித நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

இந்நிலையில், கர்ப்பினி பெண்கள் மற்றும் இதய சிகிச்சை மேற்கொள்ள வேண்டியவர்கள், விபத்தில் சிக்கியவர்கள் ஆகியோருக்கு அரசு மருத்துவமனையில் ரத்தம் தேவைப்படுகிறது. பெருந்தொற்று காலம் என்பதால் யாரும் வெளியே வருவதில்லை. குறிப்பாக மருத்துவமனை பக்கமே வருவதில்லை.

இதனை உணர்ந்து கடந்த மே மாதம் முதல் வாரத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நிர்வாகிகள் கோவை அரசு மருத்துவமனை ரத்த வங்கியை அணுகி ரத்த தானம் செய்கிறோம் என தெரிவித்து கடந்த மூன்று நாட்களாக, வாலிபர் சங்கத்தினர் நாள் ஒன்றிற்கு ஐந்து பேர் வீதம் ரத்ததானம் செய்து வருகின்றனர்.



இந்த நிலையில், இன்று (3.6.2021) DYFI பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய குழு சார்பாக இரத்த தானம் செய்தனர்.



இந்த இரத்த தானம் நிகழ்வில் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர் ந. ராஜா, இரத்த தான குழு ஒருங்கிணைப்பாளர் விவேகானந்தன் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...