கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமியை சந்தித்து சமூக ஆர்வலர் ஜெயன் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமியை சந்தித்து சமூக ஆர்வலர் ஜெயன் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை வால்பாறை பகுதியில் அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக வால்பாறை மயானப்பகுதிகளில் அதற்கான போதிய இடவசதி இல்லாததாலும் எஸ்டேட் பகுதிகளில் தொற்றால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதால் அடக்கம் செய்த பிரேதங்களை செந்நாய், பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் தோண்டி எடுத்து வெளியில் இழுத்து போடுவதால் துர்நாற்றம் வீசுவதோடு நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆகவே, இதுபோன்ற இக்கட்டான நிலையை போக்குவதற்கு நடமாடும் எரிவாயு தகன மேடை ஒன்றை வால்பாறை நகராட்சி நிர்வாகம் மூலம் வாங்கி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு பரிந்துரை செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.
அதில் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை வால்பாறை பகுதியில் அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக வால்பாறை மயானப்பகுதிகளில் அதற்கான போதிய இடவசதி இல்லாததாலும் எஸ்டேட் பகுதிகளில் தொற்றால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதால் அடக்கம் செய்த பிரேதங்களை செந்நாய், பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் தோண்டி எடுத்து வெளியில் இழுத்து போடுவதால் துர்நாற்றம் வீசுவதோடு நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆகவே, இதுபோன்ற இக்கட்டான நிலையை போக்குவதற்கு நடமாடும் எரிவாயு தகன மேடை ஒன்றை வால்பாறை நகராட்சி நிர்வாகம் மூலம் வாங்கி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு பரிந்துரை செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.