கோவை: தமிழகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.யாக சுதாகர் பதவி உயர்வு பெற்றிருக்கிறார். விரைவில் அவர் பதவியேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: தமிழகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.யாக சுதாகர் பதவி உயர்வு பெற்றிருக்கிறார். விரைவில் அவர் பதவியேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் தேர்தல் சமயங்களில் தொடர்ந்து மாநகர கமிஷனர் சுமித் சரண், மாவட்ட கலெக்டர் ராஜாமணி உட்பட்ட பல்வேறு அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர். இந்தநிலையில், தற்போது மேற்கு மண்டல ஐஜி அமல்ராஜ் பணிபுரிந்து வருகிறார். கடந்த மூன்று வாரத்திற்கு முன்பு திமுக அரசு பதவி ஏற்றது. அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதிலும் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து வருகிறது. இந்தநிலையில், கோவை மேற்கு மண்டலத்திற்கு புதிய ஐஜியாக மதுரையில் டிஐஜியாக பணியாற்றிவந்த சுதாகர் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இவருடைய சொந்த ஊர் திருநெல்வேலி, இவர் நேரடியாக ஐபிஎஸ் அதிகாரியானவர். தேனி எஸ்.பி ஆகவும், மதுரை திருநெல்வேலி, தூத்துக்குடி உட்பட பல்வேறு தென் மாவட்டங்களில் மிகவும் நேர்மையாகவும் மக்கள் மனங்களில் இடம் பிடித்தும் பணியாற்றியுள்ளார் என்பது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிருந்து அமல்ராஜ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் தேர்தல் சமயங்களில் தொடர்ந்து மாநகர கமிஷனர் சுமித் சரண், மாவட்ட கலெக்டர் ராஜாமணி உட்பட்ட பல்வேறு அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர். இந்தநிலையில், தற்போது மேற்கு மண்டல ஐஜி அமல்ராஜ் பணிபுரிந்து வருகிறார். கடந்த மூன்று வாரத்திற்கு முன்பு திமுக அரசு பதவி ஏற்றது. அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதிலும் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து வருகிறது. இந்தநிலையில், கோவை மேற்கு மண்டலத்திற்கு புதிய ஐஜியாக மதுரையில் டிஐஜியாக பணியாற்றிவந்த சுதாகர் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இவருடைய சொந்த ஊர் திருநெல்வேலி, இவர் நேரடியாக ஐபிஎஸ் அதிகாரியானவர். தேனி எஸ்.பி ஆகவும், மதுரை திருநெல்வேலி, தூத்துக்குடி உட்பட பல்வேறு தென் மாவட்டங்களில் மிகவும் நேர்மையாகவும் மக்கள் மனங்களில் இடம் பிடித்தும் பணியாற்றியுள்ளார் என்பது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிருந்து அமல்ராஜ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.