கோவை: தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக கொரோனா தடுப்பூசி போதுமான அளவு வழங்காமல் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து ஜூன்.4-ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை: தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக கொரோனா தடுப்பூசி போதுமான அளவு வழங்காமல் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து ஜூன்.4-ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழ்நாட்டில் பதவி ஏற்ற நாளிலிருந்து 25 நாட்களுக்கு மேலாக இரவு பகல் பாராமல் கொரோனா தொற்றிலிருந்து தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாக்கின்ற பணியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். மருத்துவ கட்டுமானங்கள், ஆக்சிஜன் படுக்கைகள் போதுமான அளவு அனைத்து மாவட்டங்களிலும் தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனாவைத் தடுக்கின்ற பேராயுதமான கொரோனா தடுப்பூசியை அனைத்து மக்களுக்கும் வழங்குவதற்கு ஆளுகின்ற பாஜக மோடி அரசு தடையாக உள்ளது.
தமிழ்நாட்டைவிட மக்கள் தொகை குறைவான மாநிலங்களுக்கு அதிக தடுப்பூசிகளை தருகின்ற மத்திய அரசு, தமிழ்நாட்டுக்கு குறைவான தடுப்பூசிகளை கொடுத்து மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்கிறது.
வெளிநாடுகளிலிருந்து நேரடியாக தமிழக அரசு தடுப்பூசிகளை பெறுவதற்கு உரிமை இல்லை என்று தடை விதிக்கின்றது. தமிழ்நாட்டின் செங்கல்பட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பு ஊசி உற்பத்தி தொழிற்சாலையை ஒன்றிய அரசு இயக்காமல் முடக்கி வைத்திருக்கிறது. அந்தத் தொழிற்சாலையை தமிழ்நாடு அரசு ஏற்று கொரோனா தடுப்பூசி தயாரிப்பதற்கும் அனுமதி தருவதில் காலம் தாழ்த்தி வருகிறது. கொரானா தடுப்பூசி மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கையையும் ஏற்க மறுக்கிறது.
முதலில் தடுப்பு ஊசிகள் ஒன்றிய அரசு இலவசமாக வழங்கும் என்று அறிவித்த மோடி, தற்போது மாநில அரசுகளே விலைகொடுத்து வாங்க வேண்டும் என்று ரெட்டை வேடம் போடுகிறார். கொரோனா பெருந்தொற்றில் இருந்து மக்களைக் காக்கும் பொறுப்பை ஏற்று செயல்படும் மாநில அரசுக்கு உதவாமல் உரிமைகளைப் பறிக்கும் இந்திய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து. (04-06-2021) வெள்ளி காலை 11 மணி அளவில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக இணையவழிப் போராட்டம் நடத்தப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழ்நாட்டில் பதவி ஏற்ற நாளிலிருந்து 25 நாட்களுக்கு மேலாக இரவு பகல் பாராமல் கொரோனா தொற்றிலிருந்து தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாக்கின்ற பணியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். மருத்துவ கட்டுமானங்கள், ஆக்சிஜன் படுக்கைகள் போதுமான அளவு அனைத்து மாவட்டங்களிலும் தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனாவைத் தடுக்கின்ற பேராயுதமான கொரோனா தடுப்பூசியை அனைத்து மக்களுக்கும் வழங்குவதற்கு ஆளுகின்ற பாஜக மோடி அரசு தடையாக உள்ளது.
தமிழ்நாட்டைவிட மக்கள் தொகை குறைவான மாநிலங்களுக்கு அதிக தடுப்பூசிகளை தருகின்ற மத்திய அரசு, தமிழ்நாட்டுக்கு குறைவான தடுப்பூசிகளை கொடுத்து மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்கிறது.
வெளிநாடுகளிலிருந்து நேரடியாக தமிழக அரசு தடுப்பூசிகளை பெறுவதற்கு உரிமை இல்லை என்று தடை விதிக்கின்றது. தமிழ்நாட்டின் செங்கல்பட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பு ஊசி உற்பத்தி தொழிற்சாலையை ஒன்றிய அரசு இயக்காமல் முடக்கி வைத்திருக்கிறது. அந்தத் தொழிற்சாலையை தமிழ்நாடு அரசு ஏற்று கொரோனா தடுப்பூசி தயாரிப்பதற்கும் அனுமதி தருவதில் காலம் தாழ்த்தி வருகிறது. கொரானா தடுப்பூசி மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கையையும் ஏற்க மறுக்கிறது.
முதலில் தடுப்பு ஊசிகள் ஒன்றிய அரசு இலவசமாக வழங்கும் என்று அறிவித்த மோடி, தற்போது மாநில அரசுகளே விலைகொடுத்து வாங்க வேண்டும் என்று ரெட்டை வேடம் போடுகிறார். கொரோனா பெருந்தொற்றில் இருந்து மக்களைக் காக்கும் பொறுப்பை ஏற்று செயல்படும் மாநில அரசுக்கு உதவாமல் உரிமைகளைப் பறிக்கும் இந்திய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து. (04-06-2021) வெள்ளி காலை 11 மணி அளவில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக இணையவழிப் போராட்டம் நடத்தப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.