வால்பாறை அரசு மருத்துவமனைக்கு இரண்டு லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கி உதவிய சட்டமன்ற உறுப்பினர்..!

கோவை: வால்பாறை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்துக்குத் தேவையான யூபிஎஸ், படுக்கைகள், கட்டில்கள் உள்ளிட்ட ரூபாய் இரண்டு லட்சம் மதிப்பிலான பல்வேறு பொருட்களை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி வழங்கி உதவினார்.


கோவை: வால்பாறை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்துக்குத் தேவையான யூபிஎஸ், படுக்கைகள், கட்டில்கள் உள்ளிட்ட ரூபாய் இரண்டு லட்சம் மதிப்பிலான பல்வேறு பொருட்களை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி வழங்கி உதவினார்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார மருத்துவமனை உள்ளது. தற்சமயம் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில், வால்பாறை கலைக்கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்தநிலையில், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி வால்பாறை அரசு மருத்துவமனையை ஆய்வு செய்தார்.

அப்போது, மருத்துவமனை மருத்துவர் மருத்துவமனைக்கு மின் தடை இல்லாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க யூபிஎஸ் வேண்டுமென்றும் சுத்தமான குடிநீர் வழங்க ஆர்வோ மற்றும் படுக்கைகள் கட்டில்கள் போன்றவை வேண்டுமென்றும் கோரிக்கையை அளித்துள்ளார்.



அதனடிப்படையில், வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் இன்று சட்டமன்ற உறுப்பினர் அமுல்கந்தசாமியால் ஆய்வு கூட்டம் நடத்தி, அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள யூபிஎஸ் மற்றும் 50 கட்டில்களும் 100 பெட் ஆகியவற்றோடு மேலும், அத்தியாவசிய உபகரணங்களும் வழங்கப்பட்டது.



தொடர்ந்து கொரோனா காலத்தில் முன் களப்பணியாளர்கள், மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு வாழ்த்துகளும் நன்றியும் தெரிவித்தார். இந்நிகழ்வில் வால்பாறை அதிமுக நகர செயலாளர் மயில் கணேசன், மற்றும் நகராட்சி ஆணையாளர் சுரேஷ் குமார் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...