கோவை: பொள்ளாச்சி அருகே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவையினர் தொடர்ந்து 25 நாட்களாக ஏழைகளுக்கு உணவளித்து வருகின்றனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவையினர் தொடர்ந்து 25 நாட்களாக ஏழைகளுக்கு உணவளித்து வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஜூன் மாதம் 7ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொள்ளாச்சி பகுதியில் மத்திய பேருந்து நிலையம், சாலையோரங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆதரவற்ற நிலையில் வசித்து வருபவர்களின் பசியை போக்கும் வகையில் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை தலைவர் வெள்ளை நடராஜன் ஏற்பாட்டில் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், 25வது நாளான இன்று வெள்ளை நடராஜன் மற்றும் அவரது நண்பர்கள் சார்பில் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் ஏராளமான ஆதரவற்றவர்கள் உணவு பொட்டலங்களை பெற்றுச் சென்றனர்.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஜூன் மாதம் 7ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொள்ளாச்சி பகுதியில் மத்திய பேருந்து நிலையம், சாலையோரங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆதரவற்ற நிலையில் வசித்து வருபவர்களின் பசியை போக்கும் வகையில் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை தலைவர் வெள்ளை நடராஜன் ஏற்பாட்டில் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், 25வது நாளான இன்று வெள்ளை நடராஜன் மற்றும் அவரது நண்பர்கள் சார்பில் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் ஏராளமான ஆதரவற்றவர்கள் உணவு பொட்டலங்களை பெற்றுச் சென்றனர்.