திருப்பூர்: தமிழக அரசு விதித்த கொரோனா தடுப்பு நடவடிக்கையான முழு ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்ட ஆறு ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
திருப்பூர்: தமிழக அரசு விதித்த கொரோனா தடுப்பு நடவடிக்கையான முழு ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்ட ஆறு ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தமிழக அரசு ஜூன் 7-ஆம் தேதி வரை தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. அதை கவனத்தில் கொள்ளாமல் விதிமுறைகளை மீறி செயல்பட்ட ஆறு ஆலைகளை மூடி அதிகாரிகள் சீல் வைத்தனர். பல்லடம் பகுதியில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி இயங்கிய ஐந்து விசைத்தறி கூடங்கள் மற்றும் ஒரு நுால் மில்லுக்கு, வருவாய்த் துறையினர், ‘சீல்' வைத்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில், காடா துணி உற்பத்தி சார்ந்த விசைத்தறி, சைசிங், ஸ்பின்னிங் உள்ளிட்ட தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளன. ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி, நேற்று முன்தினம், சில தொழிற்சாலைகள் இயங்கி வருவதாக, அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தாசில்தார் தேவராஜ் தலைமையில், வருவாய்த் துறை அதிகாரிகள், நள்ளிரவு ஆய்வு நடத்தினர். ஐந்து விசைத்தறி கூடங்கள், ஒரு நூல் மில் ஆகியவை, தொழிலாளர்களுடன் இயங்கி வந்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து, ஆறு ஆலைகளுக்கும், ‘சீல்' வைக்கப்பட்டது. ஆறு ஆலைகளுக்கும், தலா, 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
தமிழக அரசு ஜூன் 7-ஆம் தேதி வரை தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. அதை கவனத்தில் கொள்ளாமல் விதிமுறைகளை மீறி செயல்பட்ட ஆறு ஆலைகளை மூடி அதிகாரிகள் சீல் வைத்தனர். பல்லடம் பகுதியில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி இயங்கிய ஐந்து விசைத்தறி கூடங்கள் மற்றும் ஒரு நுால் மில்லுக்கு, வருவாய்த் துறையினர், ‘சீல்' வைத்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில், காடா துணி உற்பத்தி சார்ந்த விசைத்தறி, சைசிங், ஸ்பின்னிங் உள்ளிட்ட தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளன. ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி, நேற்று முன்தினம், சில தொழிற்சாலைகள் இயங்கி வருவதாக, அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தாசில்தார் தேவராஜ் தலைமையில், வருவாய்த் துறை அதிகாரிகள், நள்ளிரவு ஆய்வு நடத்தினர். ஐந்து விசைத்தறி கூடங்கள், ஒரு நூல் மில் ஆகியவை, தொழிலாளர்களுடன் இயங்கி வந்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து, ஆறு ஆலைகளுக்கும், ‘சீல்' வைக்கப்பட்டது. ஆறு ஆலைகளுக்கும், தலா, 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.