கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே தாமரைகுளம் பகுதியில் முழு ஊரடங்கை மீறி விற்பனையில் ஈடுபட்ட மளிகை மற்றும் இறைச்சிக் கடையை பூட்டி அபராதம் விதித்து வருவாய்த் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே தாமரைகுளம் பகுதியில் முழு ஊரடங்கை மீறி விற்பனையில் ஈடுபட்ட மளிகை மற்றும் இறைச்சிக் கடையை பூட்டி அபராதம் விதித்து வருவாய்த் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைகுளம் பகுதியில் மளிகை மற்றும் இறைச்சி கடைகளில் கள்ளத்தனமாக விற்பனையில் ஈடுபட்டு வருவதாக கொரோனா தடுப்பு தனிப்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, அப்பகுதிக்கு சென்ற தனிப்படையினர் கடையை முன்பக்கமாக பூட்டிவிட்டு பின்புற வழியாக விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, கடையில் ஆய்வு நடத்திய தனிப்படையினர் தடைசெய்யப்பட்ட போதை வஸ்துக்கள் விற்பனை செய்ததும் தெரியவந்தது. பின்னர், போதை வஸ்துக்களை பறிமுதல் செய்த தனிப்படையினர் கடையை பூட்டி சாவி எடுத்துக் கொண்டதோடு அபராதமும் விதித்தனர்.

இதேபோல், அப்பகுதியில் கள்ளத்தனமாக செயல்பட்டு வந்த இறைச்சிக் கடையில் இருந்த இறைச்சியை பறிமுதல் செய்த தனிப்படையினர், இறைச்சி கடையயை பூட்டி அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைகுளம் பகுதியில் மளிகை மற்றும் இறைச்சி கடைகளில் கள்ளத்தனமாக விற்பனையில் ஈடுபட்டு வருவதாக கொரோனா தடுப்பு தனிப்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, அப்பகுதிக்கு சென்ற தனிப்படையினர் கடையை முன்பக்கமாக பூட்டிவிட்டு பின்புற வழியாக விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, கடையில் ஆய்வு நடத்திய தனிப்படையினர் தடைசெய்யப்பட்ட போதை வஸ்துக்கள் விற்பனை செய்ததும் தெரியவந்தது. பின்னர், போதை வஸ்துக்களை பறிமுதல் செய்த தனிப்படையினர் கடையை பூட்டி சாவி எடுத்துக் கொண்டதோடு அபராதமும் விதித்தனர்.
இதேபோல், அப்பகுதியில் கள்ளத்தனமாக செயல்பட்டு வந்த இறைச்சிக் கடையில் இருந்த இறைச்சியை பறிமுதல் செய்த தனிப்படையினர், இறைச்சி கடையயை பூட்டி அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.