நீலகிரி: நீலகிரி மாவட்ட சோதனைச் சாவடியில் காய்கறி வாகனத்தில் கர்நாடகாவில் இருந்து கடத்தி வந்த மதுபாட்டில்களைக் கண்டுபிடித்த கூடலூர் காவல் அதிகாரிகள், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து வழக்குப் பதிந்தனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்ட சோதனைச் சாவடியில் காய்கறி வாகனத்தில் கர்நாடகாவில் இருந்து கடத்தி வந்த மதுபாட்டில்களைக் கண்டுபிடித்த கூடலூர் காவல் அதிகாரிகள், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து வழக்குப் பதிந்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் உட்கோட்டம் கக்கநல்லா சோதனை சாவடியில் இன்று கூடலூர் காவல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து காந்தல் நோக்கி வந்த காய்கறி வாகனத்தை நிறுத்தி சோதனை செய்யும் பொழுது அதில் பிற மாநில மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அதில் சம்பந்தப்பட்டவர்களைக் கூடலூர் காவல் துறையினர் கைது செய்தனர். அதோடு, அவர்களிடமிருந்து 14.250 லிட்டர் பிறமாநில மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக மசனகுடி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தும் விசாரணை செய்து வருகின்றனர்.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளான ரவி(28), சரவண செந்தில்(39), அவர்களிடம் இருந்த 38 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. அவர்கள் வந்த வாகனங்கள் (Pick up TN 43 J 9471) கைப்பற்றப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் உட்கோட்டம் கக்கநல்லா சோதனை சாவடியில் இன்று கூடலூர் காவல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து காந்தல் நோக்கி வந்த காய்கறி வாகனத்தை நிறுத்தி சோதனை செய்யும் பொழுது அதில் பிற மாநில மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அதில் சம்பந்தப்பட்டவர்களைக் கூடலூர் காவல் துறையினர் கைது செய்தனர். அதோடு, அவர்களிடமிருந்து 14.250 லிட்டர் பிறமாநில மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக மசனகுடி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தும் விசாரணை செய்து வருகின்றனர்.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளான ரவி(28), சரவண செந்தில்(39), அவர்களிடம் இருந்த 38 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. அவர்கள் வந்த வாகனங்கள் (Pick up TN 43 J 9471) கைப்பற்றப்பட்டது.