ஊரடங்கின் போது காய்கறி மற்றும் மளிகை பொருட்களை மக்களுக்கு வீடுகளில் சந்தைப்படுத்த பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம்..!

பொள்ளாச்சி: கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக, ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களை மக்களுக்கு வீடுகளில் சந்தைப்படுத்த பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.


பொள்ளாச்சி: கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக, ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களை மக்களுக்கு வீடுகளில் சந்தைப்படுத்த பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக முழு ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து காய்கறி, பழங்கள் தள்ளுவண்டிகள், வாகனங்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் ஜூன் 7-ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு மளிகைப் பொருட்கள் தடையில்லாமல் கிடைக்க வியாபாரிகள் வருவாய்த் துறையினரிடம் அனுமதி பெற்று வாகனம் மூலம் விற்பனை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.



இதனையடுத்து பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நேர்முக உதவியாளர் தணிகைவேல், நகராட்சி ஆணையாளர் காந்திராஜன், காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவக்குமார் தலைமையில் வியாபாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆன்லைன் மூலம் விற்பனை செய்யவும், போன் மூலம் பொதுமக்களிடம் ஆர்டர்கள் பெற்று அந்தந்த பகுதிகளுக்கு சென்று விநியோகம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனுமதி இல்லாமல் வியாபாரம் செய்யும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...