சத்துணவு ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கக் கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

கோவை: முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்ட சத்துணவு ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கக் கோரி, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.


கோவை: முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்ட சத்துணவு ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கக் கோரி, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் நோய்ப் பரவல் அதிகரித்து வருவதால், சத்துணவு பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களை மாவட்ட நிர்வாகம் முன்களப் பணியாளர்களாக நியமித்து பணியாற்றி வருகின்றனர். தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் ஒன்றியம் சார்பில் இன்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் சத்துணவு பணியாளர்கள் முன் கன பணியாளர்களாக நியமித்து வீடு, வீடாக சென்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இவர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.



எனவே, முகக்கவசம், கையுறை, சானிடைசர் போன்ற நோய் தடுப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். மரணம் அடைந்தவர்களுக்கு ரூபாய் 25 லட்சம் வழங்க வேண்டும். ஊக்கத் தொகையாக ரூ 15,000 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி மாவட்டத் தலைவர் சிவசாமி, மாவட்ட செயலாளர் நவமணி தேவி, பொருளாளர் மஞ்சுளா பாய் உள்ளிட்ட நிர்வாகிகள் சார் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை வழங்கினர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...