நீலகிரி: நீலகிரி ரோட்டரி சங்கம் சார்பில் 73 லட்சம் செலவில் டயாலிசஸ் சிகிச்சை பெற 6 படுக்கை வசதிகளுடன் நவீன உலகத்தரம் வாய்ந்த கருவிகள் கொண்டு சிகிச்சை மையம் அரசு லாலி மருத்துவமனையில் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி: நீலகிரி ரோட்டரி சங்கம் சார்பில் 73 லட்சம் செலவில் டயாலிசஸ் சிகிச்சை பெற 6 படுக்கை வசதிகளுடன் நவீன உலகத்தரம் வாய்ந்த கருவிகள் கொண்டு சிகிச்சை மையம் அரசு லாலி மருத்துவமனையில் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் ரோட்டரி சங்கத்தின் சார்பில் 73 லட்சம் செலவில் டயாலிசஸ் சிகிச்சை குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் தனிப்பிரிவாகத் தொடங்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னசென்ட் திவ்யா திங்கள்கிழமை பார்வையிட்டார். நீலகிரி மாவட்டத்தில் குறைந்தளவே சிறு நீரக நோயாளிகளுக்கு டயாலிசஸ் சிகிச்சை மையங்கள் உள்ளன. மேலும், டயாலிசஸ் சிகிச்சைக்காக கோவை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலை இருந்து வந்தது.
இந்தநிலையில், நீலகிரி ரோட்டரி கிளப் சார்பில் குன்னூரில் உள்ள அரசு லாலி மருத்துவமனையில் 6 படுக்கை வசதிகளுடன், ஆக்சிஜன் வசதியுடன் டயாலிஸ் சிகிச்சை பெறும் மையத்தை 73 லட்சம் ரூபாய் செலவில் ரோட்டரி கிளப் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘நீலகிரி ரோட்டரி சங்கம் சார்பில் 73 லட்சம் செலவில் டயாலிசஸ் சிகிச்சை பெற 6 படுக்கை வசதிகளுடன் நவீன உலகத்தரம் வாய்ந்த கருவிகள் கொண்டு சிகிச்சை மையம் அரசு லாலி மருத்துவமனையில் அமைத்து கொடுத்துள்ளது, மாவட்டத்திற்கு பெரிய வரப்பிரசாதமாகும். தனியார் தொண்டு நிறுவனங்கள் முன்வந்து இதுபோன்ற சமூக சேவைகளை செய்தால் பொதுமக்கள் பயன் அடைவார்கள்'' எனக் கூறினார்.
நீலகிரி மாவட்டம் ரோட்டரி சங்கத்தின் சார்பில் 73 லட்சம் செலவில் டயாலிசஸ் சிகிச்சை குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் தனிப்பிரிவாகத் தொடங்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னசென்ட் திவ்யா திங்கள்கிழமை பார்வையிட்டார். நீலகிரி மாவட்டத்தில் குறைந்தளவே சிறு நீரக நோயாளிகளுக்கு டயாலிசஸ் சிகிச்சை மையங்கள் உள்ளன. மேலும், டயாலிசஸ் சிகிச்சைக்காக கோவை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலை இருந்து வந்தது.
இந்தநிலையில், நீலகிரி ரோட்டரி கிளப் சார்பில் குன்னூரில் உள்ள அரசு லாலி மருத்துவமனையில் 6 படுக்கை வசதிகளுடன், ஆக்சிஜன் வசதியுடன் டயாலிஸ் சிகிச்சை பெறும் மையத்தை 73 லட்சம் ரூபாய் செலவில் ரோட்டரி கிளப் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘நீலகிரி ரோட்டரி சங்கம் சார்பில் 73 லட்சம் செலவில் டயாலிசஸ் சிகிச்சை பெற 6 படுக்கை வசதிகளுடன் நவீன உலகத்தரம் வாய்ந்த கருவிகள் கொண்டு சிகிச்சை மையம் அரசு லாலி மருத்துவமனையில் அமைத்து கொடுத்துள்ளது, மாவட்டத்திற்கு பெரிய வரப்பிரசாதமாகும். தனியார் தொண்டு நிறுவனங்கள் முன்வந்து இதுபோன்ற சமூக சேவைகளை செய்தால் பொதுமக்கள் பயன் அடைவார்கள்'' எனக் கூறினார்.