கோவை: கொரோனா பெருந்தொற்று சிகிச்சைக்கென வால்பாறை அரசு மருத்துவனைக்கு ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை, நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் வழங்கினார்.
கோவை: கொரோனா பெருந்தொற்று சிகிச்சைக்கென வால்பாறை அரசு மருத்துவனைக்கு ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை, நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் வழங்கினார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் 100 ஆண்டுகள் பழமையான அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இன்று இந்த மருத்துவமனைக்கு வந்த பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் ஆக்சிஜன் செறிவூட்டி, முகக் கவசம், பாதுகாப்பு உடைகள் உட்பட ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மகேஷ் ஆனந்தியிடம் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட திமுக பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், வால்பாறை நகர பொறுப்பாளர் வழக்கறிஞர் பால்பாண்டி, வட்டார வள மைய தலைமை மருத்துவர் பாபு லக்ஷ்மன், அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், முன்னாள் நகரமன்றத் தலைவர் கோழிக்கடை கணேசன், JBR, முன்னாள் கவுன்சிலர் செல்வம், சத்தியமூர்த்தி தேயிலைத் தோட்ட நிர்வாகிகள், வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் 100 ஆண்டுகள் பழமையான அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இன்று இந்த மருத்துவமனைக்கு வந்த பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் ஆக்சிஜன் செறிவூட்டி, முகக் கவசம், பாதுகாப்பு உடைகள் உட்பட ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மகேஷ் ஆனந்தியிடம் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட திமுக பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், வால்பாறை நகர பொறுப்பாளர் வழக்கறிஞர் பால்பாண்டி, வட்டார வள மைய தலைமை மருத்துவர் பாபு லக்ஷ்மன், அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், முன்னாள் நகரமன்றத் தலைவர் கோழிக்கடை கணேசன், JBR, முன்னாள் கவுன்சிலர் செல்வம், சத்தியமூர்த்தி தேயிலைத் தோட்ட நிர்வாகிகள், வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.