கோவை: கோவையில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த ஏழ்மை குழந்தைகள் யாரேனும் இருந்தால் அவர்களது முழு கல்வி செலவையும் தானே ஏற்பதாக வடவள்ளி காவல் நிலைய ஆய்வாளர் சாஸ்தா சோம சுந்தரம் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவையில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த ஏழ்மை குழந்தைகள் யாரேனும் இருந்தால் அவர்களது முழு கல்வி செலவையும் தானே ஏற்பதாக வடவள்ளி காவல் நிலைய ஆய்வாளர் சாஸ்தா சோம சுந்தரம் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை என்பது தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையிலும் பாதிப்பு என்பது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது.
அதேபோல, கொரோனா தொற்று காரணமாக தற்போது உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், கோவை வடவள்ளி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் சாஸ்தா சோம சுந்தரம் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், கோவையில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த ஏழ்மை குழந்தைகள் யாரேனும் இருந்தால் அவர்களது முழு கல்வி செலவையும் தானே ஏற்பதாக தெரிவித்துள்ளார். மேலும், அவரது தொலைபேசி எண்ணையும் குறிப்பிட்டுள்ளார்.
தொலைபேசி எண்: 9655209000
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை என்பது தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையிலும் பாதிப்பு என்பது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது.
அதேபோல, கொரோனா தொற்று காரணமாக தற்போது உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், கோவை வடவள்ளி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் சாஸ்தா சோம சுந்தரம் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், கோவையில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த ஏழ்மை குழந்தைகள் யாரேனும் இருந்தால் அவர்களது முழு கல்வி செலவையும் தானே ஏற்பதாக தெரிவித்துள்ளார். மேலும், அவரது தொலைபேசி எண்ணையும் குறிப்பிட்டுள்ளார்.
தொலைபேசி எண்: 9655209000