கோவை: வால்பாறையில் 32 லட்சம் ரூபாய் செலவில் ஆக்சிஜன் மையம் அமைக்க நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் அவர்கள் குத்துவிளக்கேற்றி வைத்து பணியைத் தொடங்கி வைத்தார்.
கோவை: வால்பாறையில் 32 லட்சம் ரூபாய் செலவில் ஆக்சிஜன் மையம் அமைக்க நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் அவர்கள் குத்துவிளக்கேற்றி வைத்து பணியைத் தொடங்கி வைத்தார்.
கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா பெருந்தொற்று வந்ததைத் தொடர்ந்து, அதனைக் கட்டுப்படுத்த வால்பாறை அரசு கலைக்கல்லூரி கொரோனா சிகிச்சை மையம் 150 படுக்கைகள் அமைத்து ஆரம்பிக்கப்பட்டது. இதற்கான ஆக்சிஜன் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வால்பாறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்க நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில், தன்னார்வலர்கள், எஸ்டேட் நிர்வாகிகள், வியாபாரிகள், அரசியல் கட்சியினர் போன்றவர்கள் இணைந்து 32 லட்ச ரூபாய் வழங்கி ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணி இன்று தொடங்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்த இந்த நிகழ்ச்சியில், தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், வால்பாறை பொருளாளர் பால்பாண்டி, முன்னாள் நகரமன்றத் தலைவர் கோழி கடை கணேசன், வர்த்தக அணி ஜே.பாஸ்கர், மகுடீஸ்வரன், செந்தில் சுதாகர் போன்றவர்கள் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா பெருந்தொற்று வந்ததைத் தொடர்ந்து, அதனைக் கட்டுப்படுத்த வால்பாறை அரசு கலைக்கல்லூரி கொரோனா சிகிச்சை மையம் 150 படுக்கைகள் அமைத்து ஆரம்பிக்கப்பட்டது. இதற்கான ஆக்சிஜன் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வால்பாறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்க நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில், தன்னார்வலர்கள், எஸ்டேட் நிர்வாகிகள், வியாபாரிகள், அரசியல் கட்சியினர் போன்றவர்கள் இணைந்து 32 லட்ச ரூபாய் வழங்கி ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணி இன்று தொடங்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்த இந்த நிகழ்ச்சியில், தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், வால்பாறை பொருளாளர் பால்பாண்டி, முன்னாள் நகரமன்றத் தலைவர் கோழி கடை கணேசன், வர்த்தக அணி ஜே.பாஸ்கர், மகுடீஸ்வரன், செந்தில் சுதாகர் போன்றவர்கள் கலந்து கொண்டனர்.