கோவை: பொள்ளாச்சி அடுத்த மாக்கினாம்பட்டி கிராமத்தில் இதுவரை 220 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: பொள்ளாச்சி அடுத்த மாக்கினாம்பட்டி கிராமத்தில் இதுவரை 220 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்துள்ளது. பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் தினந்தோறும் 150க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் பொள்ளாச்சியை அடுத்த மாக்கினாம்பட்டி கிராமத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இரண்டாம் அலையில் 220 பேருக்கு மேற்பட்டோர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த கிராமத்தில் இரண்டாம் அலையில் மட்டும் 19 பேர் தொற்றால் இதுவரை இறந்துள்ளதாக ஊராட்சி நிர்வாகம் அவித்துள்ளது.

மேலும், இந்த கிராமத்தில் அதிக அளவில் வெளிநபர்கள் உள்ளே வருவதால் கொரோனா தொற்று பரவி வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளி நபர்கள் கிராமத்திற்குள் வராத படியும், கிராம மக்கள் வெளியே செல்லாத படியும் தடை செய்யப்பட்ட பகுதியாக கிராமம் அறிவிக்கப்பட்டு, நான்கு பகுதிகளில் உள்ள வழித்தடங்களை தகர சீட்டுகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒலிபெருக்கி மூலம் கிராம மக்களுக்கு ஊராட்சி மன்றம் சார்பில் கொரோனா தொற்று பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்துள்ளது. பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் தினந்தோறும் 150க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் பொள்ளாச்சியை அடுத்த மாக்கினாம்பட்டி கிராமத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இரண்டாம் அலையில் 220 பேருக்கு மேற்பட்டோர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த கிராமத்தில் இரண்டாம் அலையில் மட்டும் 19 பேர் தொற்றால் இதுவரை இறந்துள்ளதாக ஊராட்சி நிர்வாகம் அவித்துள்ளது.
மேலும், இந்த கிராமத்தில் அதிக அளவில் வெளிநபர்கள் உள்ளே வருவதால் கொரோனா தொற்று பரவி வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளி நபர்கள் கிராமத்திற்குள் வராத படியும், கிராம மக்கள் வெளியே செல்லாத படியும் தடை செய்யப்பட்ட பகுதியாக கிராமம் அறிவிக்கப்பட்டு, நான்கு பகுதிகளில் உள்ள வழித்தடங்களை தகர சீட்டுகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒலிபெருக்கி மூலம் கிராம மக்களுக்கு ஊராட்சி மன்றம் சார்பில் கொரோனா தொற்று பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.