கோவையில் ஊரடங்கை மீறி இயக்கப்பட்ட வாகனங்கள் பறிமுதல்..!

கோவை: கோவையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பெருந்தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஊரடங்கை மீறி சாலைகளில் சுற்றித்திரிந்தவர்களின் இரு சக்கர வாகனங்களோடு ஆட்டோக்களும் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.


கோவை: கோவையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பெருந்தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஊரடங்கை மீறி சாலைகளில் சுற்றித்திரிந்தவர்களின் இரு சக்கர வாகனங்களோடு ஆட்டோக்களும் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவையில் ஊரடங்கை மீறியதாக ஆட்டோ உட்பட 45 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கோவை மாநகர் வடவள்ளி போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். சில அத்தியாவசியத் தேவைகள் மற்றும் மருத்துவம் போன்றவற்றிற்கு மட்டும் வெளியில் வருபவர்களை விடுத்து, தேவையற்ற முறையில் வாகனங்களில் சுற்றியவர்களைப் பிடித்து வழக்குப் பதிவு செய்து வாகனங்களைப் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 13 ஆட்டோக்கள், 32 இருசக்கர வாகனங்கள் உட்பட 45 வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இரவு நேரங்களில் சுற்றித் திரிபவர்களைப் பிடிக்கவும் திருட்டுச் செயலில் ஈடுபவர்களைப் பிடிக்கவும் கோவை மாவட்ட எஸ்.பி செல்வகனகரத்தினம் உத்தரவின் பேரில் டிஎஸ்பி சீனிவாசலு மேற்பார்வையில் தொண்டாமுத்தூர் சரக காவல் ஆய்வாளர் பொறுப்பு சாஸ்தா தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...