புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் திமுக எம்.பி. ஆ.ராசாவின் மனைவி காலமானார்.
சென்னை:திமுக எம்.பி.ஆ.ராசாவின் மனைவி சற்று முன்பு காலமானார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மார்பக புற்று நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த பரமேஸ்வரி (52)உடல்நிலை கடந்த இரு நாட்களாக கவலைக்கிடமாக இருந்து வந்த நிலையில் அவரது உயிர் இன்று மாலை பிரிந்தது.
பரமேஸ்வரியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என அவருக்கு சிகிச்சை அளித்து வரும் சென்னை ரேலா மருத்துவமனை தெரிவித்திருந்த நிலையில், நேற்று முன் தினம் திமுக தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.. ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
இந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாச கருவி மூலம் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலமானார் என்ற செய்தி திமுகவினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பல்வேறு கட்சியை சேர்ந்த தலைவர்கள் அவர்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
பரமேஸ்வரியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என அவருக்கு சிகிச்சை அளித்து வரும் சென்னை ரேலா மருத்துவமனை தெரிவித்திருந்த நிலையில், நேற்று முன் தினம் திமுக தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.. ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
இந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாச கருவி மூலம் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலமானார் என்ற செய்தி திமுகவினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பல்வேறு கட்சியை சேர்ந்த தலைவர்கள் அவர்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.