பொள்ளாச்சி: கொரோனா பெருந்தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொள்ளாச்சியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் அதிக அளவில் குவிந்தனர். தடுப்பூசி பற்றாக்குறையால் தடுப்பூசி மையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
பொள்ளாச்சி: கொரோனா பெருந்தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொள்ளாச்சியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் அதிக அளவில் குவிந்தனர். தடுப்பூசி பற்றாக்குறையால் தடுப்பூசி மையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று வேகமெடுத்து வரும் சூழலில் மத்திய - மாநில அரசுகள் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அண்மைக்காலமாக கொரோனா பெருந்தொற்று காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால், அச்சமடைந்த பொதுமக்கள் தற்போது கூட்டம் கூட்டமாக தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளச் செல்கின்றனர்.

இன்று பொள்ளாச்சி நாச்சிமுத்து பிரசவ விடுதியில் பொதுமக்களுக்கு தடுப்பூசிகளைப் போட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்தநிலையில் இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக தடுப்பூசி மையத்தை வந்தடைந்தனர். சுமார் 1000 தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்ட நிலையில், மீதம் உள்ளவர்களை திருப்பி அனுப்பியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி மையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதுகுறித்து கூறிய பொதுமக்கள், ‘‘அதிகாரிகள் தடுப்பூசி குறித்த முறையான அறிவிப்பை வெளியிடாதுதான் இந்தக் கூட்டத்திற்கு காரணம் தடுப்பூசி வருகைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பகுதியைத் தேர்ந்தெடுத்து அப்பகுதி மக்களுக்கு போட்டால்தான் இப்படிபட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்'' என்று தெரிவித்தனர்.
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று வேகமெடுத்து வரும் சூழலில் மத்திய - மாநில அரசுகள் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அண்மைக்காலமாக கொரோனா பெருந்தொற்று காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால், அச்சமடைந்த பொதுமக்கள் தற்போது கூட்டம் கூட்டமாக தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளச் செல்கின்றனர்.
இன்று பொள்ளாச்சி நாச்சிமுத்து பிரசவ விடுதியில் பொதுமக்களுக்கு தடுப்பூசிகளைப் போட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்தநிலையில் இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக தடுப்பூசி மையத்தை வந்தடைந்தனர். சுமார் 1000 தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்ட நிலையில், மீதம் உள்ளவர்களை திருப்பி அனுப்பியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி மையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதுகுறித்து கூறிய பொதுமக்கள், ‘‘அதிகாரிகள் தடுப்பூசி குறித்த முறையான அறிவிப்பை வெளியிடாதுதான் இந்தக் கூட்டத்திற்கு காரணம் தடுப்பூசி வருகைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பகுதியைத் தேர்ந்தெடுத்து அப்பகுதி மக்களுக்கு போட்டால்தான் இப்படிபட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்'' என்று தெரிவித்தனர்.