கோவையிலிருந்து - ஷார்ஜாவுக்கு மே மாதத்தில் 70 டன் காய்கறி, ஆயில், மற்றும் பூக்கள் கொண்டு செல்லப்பட்டன!

கோவை: கோவையில் இருந்து - ஷார்ஜாவுக்கு மே மாதத்தில் 70 டன் காய்கறி, ஸ்னாக்ஸ், ஆயில், மற்றும் பூக்கள் கொண்டு செல்லப்பட்டன.


கோவை: கோவையில் இருந்து - ஷார்ஜாவுக்கு மே மாதத்தில் 70 டன் காய்கறி, ஸ்னாக்ஸ், ஆயில், மற்றும் பூக்கள் கொண்டு செல்லப்பட்டன.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சில வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இந்தியாவுக்கு இயக்கப்படுகின்றன.

இது தவிர உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்ப மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் 'ஏர் இந்தியா' சார்பில் இயக்கப்படுகின்றன.

இதனிடையே, கோவை சர்வதேச விமான நிலையத்தில் வழக்கமாக சிங்கப்பூர், இலங்கை மற்றும் ஷார்ஜாவுக்கு விமானங்கள் இயக்கப்படும். கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக தற்பொழுது 'ஏர் அரேபியா' நிறுவனம் மட்டுமே கோவை - ஷார்ஜா இடையே விமான சர்வீஸ் வழங்கி வருகிறது.

மே மாதத்தில் இன்று வரை மொத்தம் 70 டன் எடையிலான பொருட்கள் கோவையில் இருந்து கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இது குறித்து ஏர்போர்ட் வட்டாரங்கள் கூறியதாவது, "ஏர் அரேபியா நிறுவனம் இந்த மாதம் துவக்கத்தில் வாரத்தில் இரண்டு நாட்கள் சர்வீஸ் வழங்கி வந்தது. பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்த காரணத்தால் அடிக்கடி ஒரு விமான சர்வீஸ் ரத்து செய்யப்பட்டது.

இதனால் கடந்த இரு வாரங்களாக ஒரு விமானம் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இந்த மாதம் இதுவரை 70 டன் எடையிலான பொருட்கள் ஏற்றி செல்லப்பட்டுள்ளன. பெரும்பாலும் காய்கறிகள், ஸ்னாக்ஸ் உணவு வகைகள், ஆயில் மற்றும் பூக்கள் மட்டுமே அதிகம் புக்கிங் செய்யப்பட்டன.

ஷார்ஜாவில் இருந்து மட்டுமே பயணிகள் கோவை வரமுடியும். கோவையில் இருந்து மீண்டும் ஷார்ஜாவுக்கு செல்லும் விமானத்தில் பயணிகள் செல்ல அனுமதி இல்லை. இதனால் இந்த விமானம் திரும்பி செல்லும் பொழுது ஒவ்வொரு முறையும் 7 முதல் 8 டன் எடையிலான கார்கோ ஏற்றிச் செல்லப்பட்டது.

பயணிகள் இருந்தால் அதிகபட்சமாக 3 அல்லது மூன்றரை டன் கார்கோ மட்டுமே ஏற்றிச் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு, ஏர்போர்ட் வட்டாரங்கள் தெரிவித்தன.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...