சென்னை: செங்கல்பட்டு அருகே திருமணியில் அமைந்துள்ள மத்திய அரசுக்கு சொந்தமான HLL Biotech Ltd ( HBL) - ஒருங்கிணைந்த தடுப்பூசி மைய நிறுவனத்தைத் தமிழ்நாடு அரசே குத்தகை அடிப்படையில் ஏற்று நடத்த அமைச்சர் தங்கம் தென்னரசு மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: செங்கல்பட்டு அருகே திருமணியில் அமைந்துள்ள மத்திய அரசுக்கு சொந்தமான HLL Biotech Ltd ( HBL) - ஒருங்கிணைந்த தடுப்பூசி மைய நிறுவனத்தைத் தமிழ்நாடு அரசே குத்தகை அடிப்படையில் ஏற்று நடத்த அமைச்சர் தங்கம் தென்னரசு மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.
மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு தனது முகநூல் பக்கத்தில், ‘‘மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைப்படி, செங்கல்பட்டு அருகே திருமணியில் அமைந்துள்ள மத்திய அரசுக்கு சொந்தமான HLL Biotech Ltd ( HBL) - ஒருங்கிணைந்த தடுப்பூசி மைய நிறுவனத்தைத் தமிழ்நாடு அரசே குத்தகை அடிப்படையில் ஏற்று நடத்தி, அதன் வாயிலாக தடுப்பூசியினை தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்ய வழிவகை செய்ய வேண்டுமென வலியுறுத்தி மாண்புமிகு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சர் திரு. பியுஷ் கோயல் அவர்களைக் கழக நாடாளுமன்ற குழுத் தலைவர் அண்ணன் டி.ஆர்.பாலு அவர்களும், நானும் புது தில்லியில் சந்தித்துப் பேசினோம். மத்திய அமைச்சர் மாண்புமிகு மன்சுக் மாண்டவியா அவர்கள் உடன் இருந்தார்.
மாண்புமிகு முதல்வர் அவர்கள் மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு இது குறித்து கடிதம் எழுதி இருப்பதையும் விளக்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியிறுத்தினோம்'' என்று பதிவிட்டுள்ளார்.
மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு தனது முகநூல் பக்கத்தில், ‘‘மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைப்படி, செங்கல்பட்டு அருகே திருமணியில் அமைந்துள்ள மத்திய அரசுக்கு சொந்தமான HLL Biotech Ltd ( HBL) - ஒருங்கிணைந்த தடுப்பூசி மைய நிறுவனத்தைத் தமிழ்நாடு அரசே குத்தகை அடிப்படையில் ஏற்று நடத்தி, அதன் வாயிலாக தடுப்பூசியினை தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்ய வழிவகை செய்ய வேண்டுமென வலியுறுத்தி மாண்புமிகு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சர் திரு. பியுஷ் கோயல் அவர்களைக் கழக நாடாளுமன்ற குழுத் தலைவர் அண்ணன் டி.ஆர்.பாலு அவர்களும், நானும் புது தில்லியில் சந்தித்துப் பேசினோம். மத்திய அமைச்சர் மாண்புமிகு மன்சுக் மாண்டவியா அவர்கள் உடன் இருந்தார்.
மாண்புமிகு முதல்வர் அவர்கள் மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு இது குறித்து கடிதம் எழுதி இருப்பதையும் விளக்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியிறுத்தினோம்'' என்று பதிவிட்டுள்ளார்.