கோவை: கொரோனா நோய் தொற்று நோய் பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், சேரன் மாநகர் மற்றும் சுற்றுபுறப் பகுதிகளில் இன்று காலை கோவை மாநகராட்சி சார்பில் அனுமதி பெறப்பட்ட 3 நடமாடும் காய்கறி வாகனங்கள் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன.
கோவை: கொரோனா நோய் தொற்று நோய் பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், சேரன் மாநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை கோவை மாநகராட்சி சார்பில் அனுமதி பெறப்பட்ட 3 நடமாடும் காய்கறி வாகனங்கள் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், கோவை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு நன்றி. அதிகாரிகள் மேற்பார்வையில் விற்பனை நடைபெறும் பொழுது நியாயமான விலையில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால், ஒரு சில காய்கறி வியாபாரிகள் தங்கள் இஷ்டத்துக்கு விலையை உயர்த்தி விற்பனை செய்து வருகின்றனர். சில வாகனங்கள் வேறு பகுதிக்கு அனுமதி பெற்றுவிட்டு அதற்கு சம்பந்தமில்லாத வார்டு பகுதிகளில் காய்கறி விற்பனை செய்து வருகின்றனர். இதனால் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை மக்களுக்கு சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆகவே, இதனை கண்காணிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எதிர்வரும் நாட்களிலும் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், கோவை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு நன்றி. அதிகாரிகள் மேற்பார்வையில் விற்பனை நடைபெறும் பொழுது நியாயமான விலையில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால், ஒரு சில காய்கறி வியாபாரிகள் தங்கள் இஷ்டத்துக்கு விலையை உயர்த்தி விற்பனை செய்து வருகின்றனர். சில வாகனங்கள் வேறு பகுதிக்கு அனுமதி பெற்றுவிட்டு அதற்கு சம்பந்தமில்லாத வார்டு பகுதிகளில் காய்கறி விற்பனை செய்து வருகின்றனர். இதனால் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை மக்களுக்கு சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆகவே, இதனை கண்காணிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எதிர்வரும் நாட்களிலும் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.