கோவை: கோவையில் இளம்பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர் மீது புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து அந்த வாலிபரைக் கைது செய்தனர்.
கோவை: கோவையில் இளம்பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர் மீது புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து அந்த வாலிபரைக் கைது செய்தனர்.
கோவை மேட்டுப்பாளையம் ரோடு முத்துமாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் 30 வயது இளம்பெண், இவர் நேற்று முன்தினம் தனது வீட்டு பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது வெளியே யாரும் இல்லாததை அறிந்த வாலிபர் ஒருவர் பாத்ரூம் கதவின் இடுக்கு வழியாக அந்தப் பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் சத்தம் போட்டார். இதனால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார்.
அந்த இளம்பெண் நடந்தவற்றை தன் கணவரிடம் கூறி கதறி அழுதார். பின்னர் இதுகுறித்து அந்த இளம்பெண் சாய்பாபா காலனி போலீஸில் புகார் தெரிவித்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்தது அந்தப் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரன் 24, என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை மேட்டுப்பாளையம் ரோடு முத்துமாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் 30 வயது இளம்பெண், இவர் நேற்று முன்தினம் தனது வீட்டு பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது வெளியே யாரும் இல்லாததை அறிந்த வாலிபர் ஒருவர் பாத்ரூம் கதவின் இடுக்கு வழியாக அந்தப் பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் சத்தம் போட்டார். இதனால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார்.
அந்த இளம்பெண் நடந்தவற்றை தன் கணவரிடம் கூறி கதறி அழுதார். பின்னர் இதுகுறித்து அந்த இளம்பெண் சாய்பாபா காலனி போலீஸில் புகார் தெரிவித்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்தது அந்தப் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரன் 24, என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.