கோவை: கிணத்துக்கடவு அக்சயா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பெருந்தொற்று சிகிச்சை மையத்தை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார்.
கோவை: கிணத்துக்கடவு அக்சயா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பெருந்தொற்று சிகிச்சை மையத்தை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார்.
கோவை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொரோனா சிகிச்சை மையத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு வட்டாரப் பகுதியில் உள்ள அக்சயா பொறியியல் கல்லூரியில் 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையமும், இதேபோல் நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையமும் தொடங்கப்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு அக்சயா கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை இன்று தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

மேலும், கொரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்த அமைச்சர் குழுவினர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி கொரோனா நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்க மருத்துவர்களிடம் வலியுறுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், கோவை கிழக்கு மாவட்ட திமுக பொதுக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் மற்றும் அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொரோனா சிகிச்சை மையத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு வட்டாரப் பகுதியில் உள்ள அக்சயா பொறியியல் கல்லூரியில் 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையமும், இதேபோல் நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையமும் தொடங்கப்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு அக்சயா கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை இன்று தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
மேலும், கொரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்த அமைச்சர் குழுவினர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி கொரோனா நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்க மருத்துவர்களிடம் வலியுறுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், கோவை கிழக்கு மாவட்ட திமுக பொதுக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் மற்றும் அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.