பொள்ளாச்சி: பொள்ளாச்சியின் முக்கிய வீதிகள், கொரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையான ஊரடங்கு காரணமாக போக்குவரத்து மற்றும் கடைகள் எதுவும் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.
பொள்ளாச்சி: பொள்ளாச்சியின் முக்கிய வீதிகள், கொரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையான ஊரடங்கு காரணமாக போக்குவரத்து மற்றும் கடைகள் எதுவும் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஒரு வார காலத்திற்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இதனையடுத்து பொள்ளாச்சிப் பகுதியில் மத்திய பேருந்து நிலையம், கோவை சாலை, உடுமலை சாலை, புதிய திட்ட சாலை உள்ளிட்ட முக்கியச் சாலைகள் அனைத்தும் கடைகள் அடைக்கப்பட்டு வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.

அதேபோல், மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படும் கடைவீதி, வெங்கட்ரமணன் வீதி, உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து வர்த்தக நிறுவனங்களும் கடைகளும் மூடப்பட்டு உள்ளதால், மக்கள் நடமாட்டம் இன்றி அமைதியான சூழல் நிலவி வருகிறது. மருந்தகங்கள் மட்டும் திறக்கப்பட்டுள்ளதால், மருந்துகள் வாங்க மட்டும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஒரு வார காலத்திற்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இதனையடுத்து பொள்ளாச்சிப் பகுதியில் மத்திய பேருந்து நிலையம், கோவை சாலை, உடுமலை சாலை, புதிய திட்ட சாலை உள்ளிட்ட முக்கியச் சாலைகள் அனைத்தும் கடைகள் அடைக்கப்பட்டு வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.
அதேபோல், மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படும் கடைவீதி, வெங்கட்ரமணன் வீதி, உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து வர்த்தக நிறுவனங்களும் கடைகளும் மூடப்பட்டு உள்ளதால், மக்கள் நடமாட்டம் இன்றி அமைதியான சூழல் நிலவி வருகிறது. மருந்தகங்கள் மட்டும் திறக்கப்பட்டுள்ளதால், மருந்துகள் வாங்க மட்டும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.