கோவை: கிணத்துக்கடவு சிக்கலாம்பாளையம் பகுதியில் ஆதரவற்றோருக்கு திமுக சார்பில் உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது.
கோவை: கிணத்துக்கடவு சிக்கலாம்பாளையம் பகுதியில் ஆதரவற்றோருக்கு திமுக சார்பில் உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு நாளில் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவுகளை வழங்க திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திமுகவினருக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி இன்று கிணத்துக்கடவு அருகே உள்ள சிக்கலாம்பாளையம் பகுதியில் ஆதரவின்றி இருந்த மக்களுக்கு திமுக சார்பில் உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது.

இதில் கோவை கிழக்கு மாவட்ட திமுக பொதுக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கினார்.
இந்த நிகழ்வில் கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் முகமது யாசின், தமிழ்ப்பித்தன், கணேஷ்குமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு நாளில் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவுகளை வழங்க திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திமுகவினருக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி இன்று கிணத்துக்கடவு அருகே உள்ள சிக்கலாம்பாளையம் பகுதியில் ஆதரவின்றி இருந்த மக்களுக்கு திமுக சார்பில் உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது.
இதில் கோவை கிழக்கு மாவட்ட திமுக பொதுக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கினார்.
இந்த நிகழ்வில் கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் முகமது யாசின், தமிழ்ப்பித்தன், கணேஷ்குமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.