கோவை: கோவையில் இருந்து மதுரை, திருச்சி, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களுக்கு 160 அரசு பேருந்துகள் நேற்று இயக்கப்பட்டன.
கோவை: கோவையில் இருந்து மதுரை, திருச்சி, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களுக்கு 160 அரசு பேருந்துகள் நேற்று இயக்கப்பட்டன.
தமிழகத்தில் இன்று முதல் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதையடுத்து தொழிலாளர்கள், பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல 2 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதன்படி, கோவையில் நேற்று முன்தினம் முதல் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இந்த நிலையில், இரண்டாவது நாளாக நேற்று கோவையில் இருந்து திண்டுக்கல், மதுரை, கரூர், நாமக்கல், தேனி, சேலம் உள்ளிட்ட இடங்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.
கோவை உக்கடத்தில் இருந்து பழனி, உடுமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு நேற்று காலை முதல் பேருந்துகள் இயக்கப்பட்டது.
இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர் உள்ளிட்ட இடங்களுக்கு 90 பேருந்துகளும், சேலம், ஈரோடு, உடுமலை, கோவை-மேட்டுப்பாளையம், கோவை-பொள்ளாச்சி இடையே 70 என 160 பேருந்துகள் இயக்கப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் இன்று முதல் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதையடுத்து தொழிலாளர்கள், பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல 2 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதன்படி, கோவையில் நேற்று முன்தினம் முதல் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இந்த நிலையில், இரண்டாவது நாளாக நேற்று கோவையில் இருந்து திண்டுக்கல், மதுரை, கரூர், நாமக்கல், தேனி, சேலம் உள்ளிட்ட இடங்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.
கோவை உக்கடத்தில் இருந்து பழனி, உடுமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு நேற்று காலை முதல் பேருந்துகள் இயக்கப்பட்டது.
இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர் உள்ளிட்ட இடங்களுக்கு 90 பேருந்துகளும், சேலம், ஈரோடு, உடுமலை, கோவை-மேட்டுப்பாளையம், கோவை-பொள்ளாச்சி இடையே 70 என 160 பேருந்துகள் இயக்கப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.