கோவை: கோவை மாநகராட்சி மையங்களில் தடுப்பூசி போட வரும் பொதுமக்கள் வரிசையில் காத்திருப்பதை தடுக்க டோக்கன் வழங்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கோவை: கோவை மாநகராட்சி மையங்களில் தடுப்பூசி போட வரும் பொதுமக்கள் வரிசையில் காத்திருப்பதை தடுக்க டோக்கன் வழங்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால், தட்டுப்பாடு காரணமாக பொதுமக்களுக்கு தடுப்பூசி போட முடியாத நிலை உள்ளது.
தடுப்பூசி போடுவதற்காக தடுப்பூசி மையங்களில் காலை முதல் நீண்ட வரிசையில் மக்கள் காத்து கிடக்க வேண்டிய நிலை உள்ளது. இதன் மூலமாகவும் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. சில நேரங்களில் தடுப்பூசி தீர்ந்து விட்டது. எனவே, திரும்பிச் செல்லுங்கள் என்று சுகாதார துறை ஊழியர்கள் கூறி விடுகின்றனர். இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதை தவிர்க்க டோக்கன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "கோவை மாநகராட்சியில் அரசு கலைக்கல்லூரி, வரதராஜபுரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, ராமலிங்கம் காலனி மாநகராட்சி பள்ளி, மணியக்காரம்பாளையம் மாநகராட்சி தொடக்க பள்ளி ஆகிய 5 இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. இங்கு பொதுமக்கள் காலை நேரத்தில் தடுப்பூசி போடுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
இதனை தவிர்க்க டோக்கன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி தடுப்பூசி போட வருபவருக்கு தடுப்பூசி போடப்படும் தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு இருக்கும். அந்த நேரத்தில் மட்டும் தடுப்பூசி போட அவர் வந்தால் போதும். இதன்மூலம் யாரும் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால், தட்டுப்பாடு காரணமாக பொதுமக்களுக்கு தடுப்பூசி போட முடியாத நிலை உள்ளது.
தடுப்பூசி போடுவதற்காக தடுப்பூசி மையங்களில் காலை முதல் நீண்ட வரிசையில் மக்கள் காத்து கிடக்க வேண்டிய நிலை உள்ளது. இதன் மூலமாகவும் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. சில நேரங்களில் தடுப்பூசி தீர்ந்து விட்டது. எனவே, திரும்பிச் செல்லுங்கள் என்று சுகாதார துறை ஊழியர்கள் கூறி விடுகின்றனர். இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதை தவிர்க்க டோக்கன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "கோவை மாநகராட்சியில் அரசு கலைக்கல்லூரி, வரதராஜபுரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, ராமலிங்கம் காலனி மாநகராட்சி பள்ளி, மணியக்காரம்பாளையம் மாநகராட்சி தொடக்க பள்ளி ஆகிய 5 இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. இங்கு பொதுமக்கள் காலை நேரத்தில் தடுப்பூசி போடுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
இதனை தவிர்க்க டோக்கன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி தடுப்பூசி போட வருபவருக்கு தடுப்பூசி போடப்படும் தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு இருக்கும். அந்த நேரத்தில் மட்டும் தடுப்பூசி போட அவர் வந்தால் போதும். இதன்மூலம் யாரும் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.