கோவை: கொரோனா பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்கும் நோக்கோடு முழு ஊரடங்கு நாளைமுதல் அமலுக்கு வருகிறது. இதனையொட்டி, பொது மக்கள் வெளியூர்களுக்கு செல்ல வால்பாறை பணிமனையில் இருந்து 10 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.
கோவை: கொரோனா பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்கும் நோக்கோடு முழு ஊரடங்கு நாளைமுதல் அமலுக்கு வருகிறது. இதனையொட்டி, பொது மக்கள் வெளியூர்களுக்கு செல்ல வால்பாறை பணிமனையில் இருந்து 10 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகப் பணிமனையில் இருந்து இன்று பேருந்துகள் இயங்குவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது காலை 6 மணி முதல் பொள்ளாச்சி மார்க்கமாக 5 பேருந்துகளும் மற்றும் எஸ்டேட் பகுதிகளான ஷேக்கல்முடி புதுக்காடு ஹைபாரஸ்ட் முடீஸ் அக்காமலை போன்ற தேயிலைத் தோட்டப் பகுதிகளுக்கு 5 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
பேருந்து நடத்துநர் அறிவுறுத்தலின்படி அனைத்து பேருந்துகளிலும் பயணிகள் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, அதன் பின்னரே பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் சிறப்பு பேருந்துகளாக மதுரை வரைக்கும் இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டுள்ளது. இன்று இரவு 9 மணி வரைக்கும் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகப் பணிமனையில் இருந்து இன்று பேருந்துகள் இயங்குவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது காலை 6 மணி முதல் பொள்ளாச்சி மார்க்கமாக 5 பேருந்துகளும் மற்றும் எஸ்டேட் பகுதிகளான ஷேக்கல்முடி புதுக்காடு ஹைபாரஸ்ட் முடீஸ் அக்காமலை போன்ற தேயிலைத் தோட்டப் பகுதிகளுக்கு 5 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
பேருந்து நடத்துநர் அறிவுறுத்தலின்படி அனைத்து பேருந்துகளிலும் பயணிகள் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, அதன் பின்னரே பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் சிறப்பு பேருந்துகளாக மதுரை வரைக்கும் இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டுள்ளது. இன்று இரவு 9 மணி வரைக்கும் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.