தடுப்பூசி போட தனி மையம் அமைக்க வேண்டும்... எஸ்.எஸ்.குளம் பகுதி மக்கள் கோரிக்கை..!

கோவை: தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவிக் கொண்டிருக்கும் நிலையில் தடுப்பு ஊசி போட தனி மையம் அமைக்க வேண்டும் என கோவை எஸ்.எஸ். குளம் பகுதியில் உள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவிக் கொண்டிருக்கும் நிலையில் தடுப்பு ஊசி போட தனி மையம் அமைக்க வேண்டும் என கோவை எஸ்.எஸ். குளம் பகுதியில் உள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில் தடுப்பு ஊசி போட தனி மையம் அமைக்க வேண்டும் என கோவை எஸ்.எஸ். குளம் பகுதியில் உள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தநிலையில், 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக கோவை மாவட்டத்தில் பல இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றிய பகுதியில் 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு மையம் அமைக்கப்படவில்லை. இதனால், அந்தப் பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏழு ஊராட்சிகளைச் சேர்ந்த கிராம மக்கள் சரவணம்பட்டி அன்னூர், சூலூர் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு வசதியாக தனியாக எஸ்.எஸ்.குளம் ஒன்றியம் மற்றும் சரவணம்பட்டி பகுதியில் உள்ள சுகாதார மையம் மற்றும் அரசு பள்ளிகள், தனியார் திருமண, மண்டபங்களில் ஏற்பாடு செய்ய வேண்டும். இதில் ஏற்கெனவே இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தடுப்பூசி போடுவதற்காக கோவில்பாளையம் அரசு மருத்துவமனைக்கு வருவதால் அங்கு கூட்டம் எப்போதும் நிரம்பி வழிகிறது. இன்று, முதல் டோஸ் தடுப்பு ஊசி போடுவதற்கு பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து செல்கின்றனர். ஆகவே, 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள் தடுப்பூசி போடுவதற்கு தனியாக மையம் அமைக்க வேண்டும்'' என்றனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...