கோவை: கோவையில் மேகமூட்டமாக காணப்பட்டதைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு தொடங்கிய மழை தொடர்ந்து இரவு முழுவதும் விடிய விடிய பெய்தது. பலத்த மழையாக இல்லாமல் சாரல் மற்றும் மிதமான மழையாகப் பெய்து கொண்டே இருந்தது.
கோவை: கோவையில் மேகமூட்டமாக காணப்பட்டதைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு தொடங்கிய மழை தொடர்ந்து இரவு முழுவதும் விடிய விடிய பெய்தது. பலத்த மழையாக இல்லாமல் சாரல் மற்றும் மிதமான மழையாகப் பெய்து கொண்டே இருந்தது.
கிழக்கு மத்திய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது புயலாக மாறி ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் 26-ஆம் தேதி கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இந்தநிலையில், இன்று முழுமையான புயலாக மாறும் சூழ்நிலை உள்ளதால் - தமிழகத்தில் எட்டுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
இதனைத்தொடர்ந்து, நேற்று மாலையில் இருந்து கோவையில் மேகமூட்டமாகக் காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு தொடங்கிய மழை தொடர்ந்து இரவு முழுவதும் விடிய விடிய பெய்தது. பலத்த மழை இல்லாமல் சாரல் மற்றும் மிதமான மழையாக பெய்து கொண்டே இருந்தது. தொடர்ந்து வெயிலுக்கு ஆளாகி வந்த கோவை மக்கள் இந்தக் குளிர்மழையால் கொஞ்சம் மகிழ்ச்சி அடைந்தனர்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல், அதி தீவிர புயலாக மாற வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளைக்குள் கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவில் மேலும் வலுவடைய வாய்ப்புள்ளது. இது வடக்கு, வட மேற்காக நகர்ந்து 24-ம் தேதிக்குள் புயலாக உருவாகும். பின்னர் அடுத்த 24 மணி நேரத்தில் அது அதி தீவிர புயலாக வலுவடைய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது. வருகிற 26-ஆம் தேதி மாலையில் மேற்கு வங்கம் மற்றும் அதை ஒட்டிய வடக்கு ஒடிசா வங்கதேசம் பகுதியில் கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மத்திய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது புயலாக மாறி ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் 26-ஆம் தேதி கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இந்தநிலையில், இன்று முழுமையான புயலாக மாறும் சூழ்நிலை உள்ளதால் - தமிழகத்தில் எட்டுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
இதனைத்தொடர்ந்து, நேற்று மாலையில் இருந்து கோவையில் மேகமூட்டமாகக் காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு தொடங்கிய மழை தொடர்ந்து இரவு முழுவதும் விடிய விடிய பெய்தது. பலத்த மழை இல்லாமல் சாரல் மற்றும் மிதமான மழையாக பெய்து கொண்டே இருந்தது. தொடர்ந்து வெயிலுக்கு ஆளாகி வந்த கோவை மக்கள் இந்தக் குளிர்மழையால் கொஞ்சம் மகிழ்ச்சி அடைந்தனர்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல், அதி தீவிர புயலாக மாற வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளைக்குள் கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவில் மேலும் வலுவடைய வாய்ப்புள்ளது. இது வடக்கு, வட மேற்காக நகர்ந்து 24-ம் தேதிக்குள் புயலாக உருவாகும். பின்னர் அடுத்த 24 மணி நேரத்தில் அது அதி தீவிர புயலாக வலுவடைய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது. வருகிற 26-ஆம் தேதி மாலையில் மேற்கு வங்கம் மற்றும் அதை ஒட்டிய வடக்கு ஒடிசா வங்கதேசம் பகுதியில் கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.