திருப்பூர்: திருப்பூரில் அண்டை மாவட்டங்களுக்கு செல்ல போதிய அளவு அரசு பேருந்துகள் இயக்கப்படாததால், தனியார் பேருந்துகளில் அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.
திருப்பூர்: திருப்பூரில் அண்டை மாவட்டங்களுக்கு செல்ல போதிய அளவு அரசு பேருந்துகள் இயக்கப்படாததால், தனியார் பேருந்துகளில் அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் நாளை முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள சூழ்நிலையில் இன்று அண்டை மாவட்டங்களுக்கு செல்ல பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திருப்பூரில் இருந்து ஈரோடு உள்ளிட்ட அண்டை மாவட்டங்களுக்கு செல்ல போதுமான பேருந்துகள் இயக்கப்படவில்லை.

சேலம் வரை செல்லும் பேருந்துகளில் ஈரோடு பயணிகளை ஏற்றாததன் காரணமாக அங்கு உள்ள தனியார் பேருந்துகள் ஈரோடு மாவட்டத்திற்கு அழைத்துச் செல்ல சாதாரண கட்டணத்தை விட அதிகக் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி, அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இன்று இரவு வரை பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் அரசு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் நாளை முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள சூழ்நிலையில் இன்று அண்டை மாவட்டங்களுக்கு செல்ல பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திருப்பூரில் இருந்து ஈரோடு உள்ளிட்ட அண்டை மாவட்டங்களுக்கு செல்ல போதுமான பேருந்துகள் இயக்கப்படவில்லை.
சேலம் வரை செல்லும் பேருந்துகளில் ஈரோடு பயணிகளை ஏற்றாததன் காரணமாக அங்கு உள்ள தனியார் பேருந்துகள் ஈரோடு மாவட்டத்திற்கு அழைத்துச் செல்ல சாதாரண கட்டணத்தை விட அதிகக் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி, அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இன்று இரவு வரை பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் அரசு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.