திருப்பூர்: தமிழகத்தில் நாளை முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து மளிகை, காய்கறி பொருட்கள் வாங்க இன்று கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மட்டன், சிக்கன், மீன் கடைகளிலும் மக்கள் திரண்டனர். இதனால் திருப்பூரில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருப்பூர்: தமிழகத்தில் நாளை முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து மளிகை, காய்கறி பொருட்கள் வாங்க இன்று கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மட்டன், சிக்கன், மீன் கடைகளிலும் மக்கள் திரண்டனர். இதனால் திருப்பூரில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நாளை முதல் ஒரு வார காலத்திற்கு எந்தவித தளர்வுகளுமின்றி ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் நலன் கருதி நேற்று இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும், இன்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையும் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் மூடியிருந்த காய்கறி, மளிகை உள்ளிட்ட அனைத்து கடைகளும் நேற்று மதியத்திற்கு மேல் உடனடியாக திறக்கப்பட்டன. ஒரு வாரம் தளர்வுகள் இல்லா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை ஒரு வாரத்திற்கு வாங்கி வைத்து கொள்ள முடிவு செய்தனர்.

இதனால், அவர்கள் மளிகை கடை, காய்கறி கடைகளில் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க திரண்டனர். மொத்தமாக அவர்கள் ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர். இதனால், அனைத்து கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. நாளை முதல் ஒரு வாரத்திற்கு மட்டன், சிக்கன், மீன் கடைகள் இயங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த கடைகளிலும் கூட்டம் சற்று அதிகமாக காணப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க ஒரே நேரத்தில் குவிந்ததால் திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நாளை முதல் ஒரு வார காலத்திற்கு எந்தவித தளர்வுகளுமின்றி ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் நலன் கருதி நேற்று இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும், இன்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையும் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் மூடியிருந்த காய்கறி, மளிகை உள்ளிட்ட அனைத்து கடைகளும் நேற்று மதியத்திற்கு மேல் உடனடியாக திறக்கப்பட்டன. ஒரு வாரம் தளர்வுகள் இல்லா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை ஒரு வாரத்திற்கு வாங்கி வைத்து கொள்ள முடிவு செய்தனர்.
இதனால், அவர்கள் மளிகை கடை, காய்கறி கடைகளில் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க திரண்டனர். மொத்தமாக அவர்கள் ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர். இதனால், அனைத்து கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. நாளை முதல் ஒரு வாரத்திற்கு மட்டன், சிக்கன், மீன் கடைகள் இயங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த கடைகளிலும் கூட்டம் சற்று அதிகமாக காணப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க ஒரே நேரத்தில் குவிந்ததால் திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.