பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் பயணிகளை எதிர்பார்த்து வாழ்வாதாரத்திற்காக காத்திருந்த ஆட்டோ ஓட்டுநர்கள்; முழு ஊரடங்கினால் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் பயணிகளை எதிர்பார்த்து வாழ்வாதாரத்திற்காக காத்திருந்த ஆட்டோ ஓட்டுநர்கள்; முழு ஊரடங்கினால் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்தநிலையில், தொடர்ந்து பரவல் அதிகரித்துவரும் காரணத்தினால் மருத்துவக் குழுவின் பரிந்துரைப்படி திங்கட்கிழமை முதல் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனையடுத்து நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளையும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியில் இன்று அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு உள்ளன. கடைகள் திறக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வெளியில் வருவார்கள் என நம்பி தங்களின் வாழ்வாதாரத்தை எதிர்பார்த்து ஆட்டோ ஓட்டுநர்களும் சவாரிக்காகக் காத்திருந்தனர். ஆனால், பயணிகள் இல்லாததால் ஆட்டோக்கள் ஓடாமல் வரிசையாக புதிய பேருந்து நிலைய ஆட்டோ ஸ்டேண்டில் நின்றன. இதனையடுத்து இந்த முழு ஊரடங்கினால் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசு தங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கவேண்டுமென பொள்ளாச்சி ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்தநிலையில், தொடர்ந்து பரவல் அதிகரித்துவரும் காரணத்தினால் மருத்துவக் குழுவின் பரிந்துரைப்படி திங்கட்கிழமை முதல் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனையடுத்து நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளையும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியில் இன்று அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு உள்ளன. கடைகள் திறக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வெளியில் வருவார்கள் என நம்பி தங்களின் வாழ்வாதாரத்தை எதிர்பார்த்து ஆட்டோ ஓட்டுநர்களும் சவாரிக்காகக் காத்திருந்தனர். ஆனால், பயணிகள் இல்லாததால் ஆட்டோக்கள் ஓடாமல் வரிசையாக புதிய பேருந்து நிலைய ஆட்டோ ஸ்டேண்டில் நின்றன. இதனையடுத்து இந்த முழு ஊரடங்கினால் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசு தங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கவேண்டுமென பொள்ளாச்சி ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.