பொள்ளாச்சி பழங்குடியினருக்கு திமுக சார்பில் நிவாரண பொருட்கள்..!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில் உள்ள பழங்குடியினருக்கு திமுக சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில் உள்ள பழங்குடியினருக்கு திமுக சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரகத்தில் சின்னார் பதி, நவமலை, சர்க்கார்பதி, நாகர் ஊற்று உள்ளிட்ட ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன. கொரோனா நோய்த் தொற்று காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து உள்ள பழங்குடியின மக்களுக்கு அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளில் திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஆனைமலை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் யுவராஜ் தலைமையில் இன்று ஆழியார் அருகே உள்ள சின்னார் பதி மற்றும் நவமலை ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமார் 100 குடும்பங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் கலந்து கொண்ட கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் பழங்குடியின மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். தொடர்ந்து ஊரடங்கு காலங்களில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் திமுக வினர் தெரிவித்துள்ளார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...