கோவை: தமிழகம் முழுவதும் திங்கட்கிழமை முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதையடுத்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல இன்றும், நாளையும் அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கோவையில் இருந்து சேலம், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட வெளியூர்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.
கோவை: தமிழகம் முழுவதும் திங்கட்கிழமை முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதையடுத்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல இன்றும், நாளையும் அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கோவையில் இருந்து சேலம், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட வெளியூர்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.
தமிழகம் முழுவதும் திங்கட்கிழமை முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இதையடுத்து, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, திண்டுக்கல், தேனி, திருச்சி ஆகிய இடங்களுக்கும், காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு, சேலம் ஆகிய இடங்களுக்கும் மதியம் முதல் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதுகுறித்து கோவை அரசு போக்குவரத்து கழக மண்டல அதிகாரி ஒருவர் கூறியதாவது:
‘‘தமிழக அரசின் உத்தரவைத் தொடர்ந்து கோவையில் இருந்து வெளியூர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர, கோவை-பொள்ளாச்சி, கோவை-மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களுக்கும் பேருந்துகள் இயக்கி வருகின்றோம்.

மதுரை, திருச்சி, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட வெளியூர்களுக்கு 50 பேருந்துகள் முதற்கட்டமாக இயக்கப்படுகிறது. பயணிகள் கூட்டம் அதிகரித்தால், அதற்கு ஏற்றார்போல் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும். இதற்காக அனைத்து பேருந்து நிலையங்களிலும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தயார் நிலையில் உள்ளனர்'' என்று கூறினார்.
தமிழகம் முழுவதும் திங்கட்கிழமை முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
இதையடுத்து, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, திண்டுக்கல், தேனி, திருச்சி ஆகிய இடங்களுக்கும், காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு, சேலம் ஆகிய இடங்களுக்கும் மதியம் முதல் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதுகுறித்து கோவை அரசு போக்குவரத்து கழக மண்டல அதிகாரி ஒருவர் கூறியதாவது:
‘‘தமிழக அரசின் உத்தரவைத் தொடர்ந்து கோவையில் இருந்து வெளியூர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர, கோவை-பொள்ளாச்சி, கோவை-மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களுக்கும் பேருந்துகள் இயக்கி வருகின்றோம்.
மதுரை, திருச்சி, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட வெளியூர்களுக்கு 50 பேருந்துகள் முதற்கட்டமாக இயக்கப்படுகிறது. பயணிகள் கூட்டம் அதிகரித்தால், அதற்கு ஏற்றார்போல் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும். இதற்காக அனைத்து பேருந்து நிலையங்களிலும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தயார் நிலையில் உள்ளனர்'' என்று கூறினார்.