கிணத்துக்கடவில் புதிதாக இன்று 62 பேருக்கு கொரோனா உறுதி..! காய்ச்சல் முகாமில் அறிகுறியுடன் இருந்த 60 பேருக்கு பரிசோதனை!

கோவை: கோவை கிணத்துக்கடவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிக கடுமையாக அதிகரித்து வருகிறது. கிணத்துக்கடவு பகுதியில் மே-20ம் தேதி வரை 1,136 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருந்த நிலையில், மேலும் புதிதாக 62 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.


கோவை: கோவை கிணத்துக்கடவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிக கடுமையாக அதிகரித்து வருகிறது. கிணத்துக்கடவு பகுதியில் மே-20ம் தேதி வரை 1,136 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருந்த நிலையில், மேலும் புதிதாக 62 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதனால் கிணத்துக்கடவு பகுதியில் மொத்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,136 இருந்து 1,198 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.

காய்ச்சல் முகாம்

சுகாதாரத்துறை சார்பாக தொற்றின் தாக்கத்தை குறைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அறிகுறிகள் உள்ளவர்களை ஆரம்பத்திலேயே கண்டறிய, காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக, கிணத்துக்கடவு தாலூக்கா பகுதி மற்றும் கொரோனா தொற்று அதிகமுள்ள இடங்களான காட்டம்பட்டி, தாசநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில், இன்று காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டது. இந்த மருத்துவ பரிசோதனையில் கொரோனா அறிகுறியுடன் இருந்த 60 பேருக்கு, பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்கள், முடிவுகள் வரும் வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Newsletter

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...