கோவை: முதல்வர் நிவாரண நிதிக்கு பொள்ளாச்சியில் பொதுமக்கள் திமுகவினரிடம் வழங்கிய ரூ.1 லட்சம் சார் ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோவை: முதல்வர் நிவாரண நிதிக்கு பொள்ளாச்சியில் பொதுமக்கள் திமுகவினரிடம் வழங்கிய ரூ.1 லட்சம் சார் ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தொழிலதிபர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் தங்களால் முடிந்த நிவாரணம் வழங்க முன்வரவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனையடுத்து, பொள்ளாச்சியில் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் திமுகவினரிடம் காசோலை மற்றும் நிவாரண தொகையை வழங்கினர்.
இந்த நிலையில், இன்று நகர திமுக செயலாளர் மருத்துவர் வரதராஜன் மற்றும் திமுகவினர் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட ஒரு லட்சத்திற்கான காசோலை மற்றும் தொகையை சார் ஆட்சியர் நேர்முக உதவியாளர் தணிகைவேலிடம் ஒப்படைத்தனர். இந்த தொகை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று திமுகவினர் தெரிவித்தனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தொழிலதிபர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் தங்களால் முடிந்த நிவாரணம் வழங்க முன்வரவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனையடுத்து, பொள்ளாச்சியில் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் திமுகவினரிடம் காசோலை மற்றும் நிவாரண தொகையை வழங்கினர்.
இந்த நிலையில், இன்று நகர திமுக செயலாளர் மருத்துவர் வரதராஜன் மற்றும் திமுகவினர் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட ஒரு லட்சத்திற்கான காசோலை மற்றும் தொகையை சார் ஆட்சியர் நேர்முக உதவியாளர் தணிகைவேலிடம் ஒப்படைத்தனர். இந்த தொகை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று திமுகவினர் தெரிவித்தனர்.