கோவையில் பாதி எரிந்த நிலையில் மண்டையோடு... மண்டை ஓட்டைக் கைப்பற்றி போலீஸார் விசாரணை..!

கோவை: கோவை முக்கியச் சாலைப் பகுதியில் பாதி எரிந்த நிலையில் மண்டையோடு ஒன்று சாலை ஓரத்தில் கிடந்ததைக் கண்டு பொதுமக்கள் அச்சப்பட்டு ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து தகவலறிந்த, போலீஸார் மண்டை ஓட்டைக் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.


கோவை: கோவை முக்கியச் சாலைப் பகுதியில் பாதி எரிந்த நிலையில் மண்டையோடு ஒன்று சாலை ஓரத்தில் கிடந்ததைக் கண்டு பொதுமக்கள் அச்சப்பட்டு ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து தகவலறிந்த, போலீஸார் மண்டை ஓட்டைக் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

கோவை சிங்காநல்லூர் வெள்ளலூர் சாலையில் இன்று மதியம் பாதி எரிந்த நிலையில் ஒரு மண்டை ஓடு கிடந்ததைப் பார்த்த மக்கள் அச்சப்பட்டு ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து, சிங்காநல்லூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிங்காநல்லூர் போலீஸார் மண்டையோட்டைக் கைப்பற்றி, இந்த மண்டை ஓடு ஆணா? பெண்ணா? என்பது குறித்த ஆய்வுக்காக அனுப்பினர். பாதி எரிந்த நிலையில் இருந்த அந்த மண்டையோட்டை சுடுகாட்டிலிருந்து நாய்கள் எதுவும் தூக்கிக்கொண்டு வந்து விட்டனவா? இல்லை யாரும் கொலை செய்து எரித்து மண்டையோட்டை வீசி உள்ளனரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

முக்கியச் சாலையில் நடுப்பகுதியில் பாதி எரிந்த நிலையில் கிடந்த அந்த மண்டையோட்டினால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...