கோவை: கோவையில் உள்ள குளத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் பிணம் மிதந்து கொண்டிருந்தது. தகவவலறிந்த போலீஸார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
கோவை: கோவையில் உள்ள குளத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் பிணம் மிதந்து கொண்டிருந்தது. தகவவலறிந்த போலீஸார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
கோவை பகுதியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது குறிச்சி குளம். அதில் இன்று மாலை அந்தப் பகுதியில் நடைபாதையில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் ஓர் ஆண் பிணம் கிடப்பதைப் பார்த்தனர். இதுகுறித்து உக்கடம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக உக்கடம் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி அவருடைய சட்டைப் பையில் அவருடைய அடையாள அட்டை இருக்கிறதா என்று பார்த்தனர். எந்தவிதமான அடையாள அட்டையும் அவரிடம் கிடையாது.
அதனால், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்... எதற்காக இறந்தார்... யாரும் கொலை செய்து இருக்கலாமா..? என்கிற கோணத்தில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கோவை பகுதியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது குறிச்சி குளம். அதில் இன்று மாலை அந்தப் பகுதியில் நடைபாதையில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் ஓர் ஆண் பிணம் கிடப்பதைப் பார்த்தனர். இதுகுறித்து உக்கடம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக உக்கடம் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி அவருடைய சட்டைப் பையில் அவருடைய அடையாள அட்டை இருக்கிறதா என்று பார்த்தனர். எந்தவிதமான அடையாள அட்டையும் அவரிடம் கிடையாது.
அதனால், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்... எதற்காக இறந்தார்... யாரும் கொலை செய்து இருக்கலாமா..? என்கிற கோணத்தில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.