கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனுக்கு அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் கோரிக்கை..!

கோவை: வெளியூரிலிருந்து சிகிச்சைக்கு வரும் இறந்தவர்களின் உறவினர்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் களைய, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனுக்கு, அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


கோவை: வெளியூரிலிருந்து சிகிச்சைக்கு வரும் இறந்தவர்களின் உறவினர்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் களைய, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனுக்கு, அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் விடுத்துள்ள கோரிக்கையில், ‘‘கோவை அரசு மருத்துவமனைக்கு கோவிட் 19 நோய்க்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் ஆக்சிசன் பெட் இல்லை என்று சொல்லி மருத்துவமனையில் காத்திருக்கிறார்கள். மருத்துவமனையில் இருக்கும்போது, படுக்கை கிடைக்க தாமதமாகும் நிலையில் ஆம்புலன்ஸிலேயே பலர் இறந்து விடுகிறார்கள். இப்படி இறப்பவர்களை ‘Brought Dead' என பதிவு செய்து ‘MLC case'-ஆக போட்டுவிடுகிறார்கள். இதனால் வெளியூரிலிருந்து வரும் நபர்கள் அந்த காவல் நிலையம் சென்று காவல் நிலையத்தில் சான்று வழங்க புகார் கொடுத்து சான்று வாங்கி வந்து ARMO-விடம் கொடுத்த பின்புதான் பிரேதத்தை அடக்கம் செய்தற்குரிய ஏற்பாடு நடக்கிறது.

வெளியூரிலிருந்து சிகிச்சைக்கு வரும் இறந்தவர்களின் உறவினர்களுக்கு இது மிகுந்த சிரமத்தைக் கொடுக்கிறது. லாக்டவுன் சமயத்தில் அவர்கள் சொந்த ஊர் சென்று, காவல்நிலையத்தில் புகார் கொடுத்து சான்றிதழ் பெற்று வர முடியவில்லை. இதனால் பல நாட்கள் உறவினர்கள் பிரேத பரிசோதனைக்காகக் காத்திருக்கிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. Covid-19 death is not an unnatural death it's only e a natural death. As per CRPC only unnatural deaths to be investigated by police not natural death. We request this practice to be avoided to help the poor deceaseds family members.

அளப்பரிய சேவை செய்யும் கோவை அரசு மருத்துவமனையில் இதை கருத்தில் கொண்டு, இறந்தவர்களின் உறவினர்களுக்கு சிரமத்தை தரும் MLC case பதிவு செய்யும் முறையை ரத்து செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் டீன் அவர்களை கேட்டுக்கொள்கிறோம்.'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...