கோவையில் கொரோனா தடுப்பு பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு..!

கோவை: கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

கொடிசியா வளாகத்தில் கூடுதல் படுக்கை வசதிகளோடு அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.



பின்னர், சிகிச்சை மையத்தில் உருவாக்கப்பட்டுள்ள படுக்கை வசதிகளை ஆய்வு செய்தவர், மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறையினரிடம் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.



கொடிசியா வளாகத்தில் ஏற்கெனவே இரண்டு கொரோனா சிகிச்சை மையங்கள் இயங்கி வருகிறது. இந்தநிலையில், சித்த மருத்துவ சிகிச்சைக்கான படுக்கை வசதிகளோடு, கூடுதலாக 473 படுக்கை வசதிகள் கொண்ட இரு சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கோவையைச் சேர்ந்த தொழிலதிபர்கள் முதலமைச்சரை நேரில் சந்தித்து கொரோனா நிவாரண நிதிகளை வழங்கினர்.



இதனைத் தொடர்ந்து, சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் கொரோனா சிகிச்சைக்கான படுக்கை வசதிகளை முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...