கோவை: கோவை கிணத்துக்கடவு பகுதியில் முழு ஊரடங்கை பொருட்படுத்தாமல் வாகனங்களில் சுற்றித்திரிந்த நபர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு பகுதியில் முழு ஊரடங்கை பொருட்படுத்தாமல் வாகனங்களில் சுற்றித்திரிந்த நபர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர்.
தமிழகத்தில் கடந்த 10ம் தேதி முதல் வருகிற 24-ம் தேதி வரை இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. முழு ஊரடங்கு நாளில் அவசரத் தேவைக்கு மட்டும் பொதுமக்கள் வெளியே சென்று வரலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், கிணத்துக்கடவில முழு ஊரடங்கின் பத்தாவது நாளான இன்று பழைய பேருந்து நிலையம் முன்பு தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, முழு ஊரடங்கு நாளை பொருட்படுத்தாமல் தேவையின்றி வாகனங்களில் வெளியே சுற்றி வந்தவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர்.
மேலும், கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தமிழக அரசு உத்தரவுபடி வெளியே சுற்றிவருவதை தவிர்க்குமாறு காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.
தமிழகத்தில் கடந்த 10ம் தேதி முதல் வருகிற 24-ம் தேதி வரை இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. முழு ஊரடங்கு நாளில் அவசரத் தேவைக்கு மட்டும் பொதுமக்கள் வெளியே சென்று வரலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், கிணத்துக்கடவில முழு ஊரடங்கின் பத்தாவது நாளான இன்று பழைய பேருந்து நிலையம் முன்பு தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, முழு ஊரடங்கு நாளை பொருட்படுத்தாமல் தேவையின்றி வாகனங்களில் வெளியே சுற்றி வந்தவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர்.
மேலும், கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தமிழக அரசு உத்தரவுபடி வெளியே சுற்றிவருவதை தவிர்க்குமாறு காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.